மீண்டு(ம்) வரோம்…. நல்லது பன்றோம்- பிரதமர் மோடி

 

மீண்டு(ம்) வரோம்…. நல்லது பன்றோம்- பிரதமர் மோடி

“தேர்தல் பரப்புரை முடிந்தது மகிழ்ச்சி அளிக்கிறது; நான் சற்று இளைப்பாறலாம். இது ஜனநாயகத்தை கொண்டாட வேண்டிய தருணம். தேர்தலை வெற்றிகரமாக நடத்த உதவிய அனைவருக்கும் நன்றி.

ஐந்து வருடங்கள் ஆட்சி நடத்தி மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்று நாங்கள் ஆட்சி அமைப்போம் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறோம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பிரதமராக பொறுப்பேற்றதலிருந்து ஒருமுறைக்கூட செய்தியாளரை சந்திக்காத பிரதமர் நரேந்திரமோடி, முதன்முறையாக இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தேர்தல் பரப்புரை முடிந்தது மகிழ்ச்சி அளிக்கிறது; நான் சற்று இளைப்பாறலாம். இது ஜனநாயகத்தை கொண்டாட வேண்டிய தருணம். தேர்தலை வெற்றிகரமாக நடத்த உதவிய அனைவருக்கும் நன்றி.

ஐந்து வருடங்கள் ஆட்சி நடத்தி மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்று நாங்கள் ஆட்சி அமைப்போம் என நம்பிக்கையுடன் இருக்கிறோம்; பாஜகவிற்கு இந்த வருட மக்களவைத் தேர்தலில் நாட்டை ஆள்வதற்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்கிறது. மக்கள் ஏகோபித்த ஆதரவு இருப்பது மகிழ்ச்சியை தருகிறது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த பிறகு வாக்குறுதிகளை விரைவில் நிறைவேற்றுவோம்” என தெரிவித்துள்ளார்.