மீண்டும் பாடகராக மாறியுள்ள சூர்யா?!
இந்த படத்தில் தெலுங்கு நடிகர் மோகன் பாபு, நடிகை அபர்ணா பாலமுரளி, ஜாக்கி ஷெராப் உட்பட பலர் நடிக்கின்றனர்.
இறுதிச்சுற்று படத்தின் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துவரும் திரைப்படம் சூரரைப் போற்று. இந்த படத்தில் தெலுங்கு நடிகர் மோகன் பாபு, நடிகை அபர்ணா பாலமுரளி, ஜாக்கி ஷெராப் உட்பட பலர் நடிக்கின்றனர்.
சூர்யாவின் 2 டி என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் சிக்யா என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். நிக்கேத் பொம்மிரெட்டி ஒளிப்பதிவு செய்கிறார். இந்தியாவில் முதல் பட்ஜெட் விமானப் பயணத்தை உருவாக்கிய ஏர் டெக்கான் உரிமையாளர் ஜி.ஆர்.கோபிநாத் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இது வாழ்க்கை வரலாறு படமல்ல.
சமீபத்தில் இப்படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நிலையில் டிசம்பர் மாதம் படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் சமீபத்தில் தான் டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளது.இதனால் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளுக்கு அதிகநாள் எடுக்கும் என்பதால் இப்படத்தின் வெளியீட்டை படக்குழு அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு ஒத்திவைக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கோலிவுட்டில் பரவலாகப் பேசப்படுகிறது.
The #maara theme is written by #arivu from #castelesscollection and is rapped by someone special keep guessing who it is … someone who has worked for the first time with me ??? keep guessing
— G.V.Prakash Kumar (@gvprakash) November 14, 2019
இந்நிலையில் ஜி.வி.பிரகாஷின் 70 வது திரைப்படம் சூரரைப் போற்று என்பதால் அதன் மீது ஸ்பெஷல் கவனத்தை செலுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், ‘இதுவரை ராப் பாடாத ஒரு நபர் ராப் பாடல் ஒன்றை பாட உள்ளார்’ என்று பதிவிட்டுள்ளார். ஜிவியின் ட்வீட்டுக்கு பதிலாக அது சூர்யா தான் என்று அவரது ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். ஏற்கனவே சூர்யா, அஞ்சான் படத்தில் ஒரு பாடல் பாடி இருந்தது குறிப்பிடத்தக்கது.