மீண்டும் இணைந்தது ஆரஞ்சு மிட்டாய் பட காம்போ! உற்சாகத்தில் ரசிகர்கள்!

 

மீண்டும் இணைந்தது ஆரஞ்சு மிட்டாய் பட காம்போ! உற்சாகத்தில் ரசிகர்கள்!

நடிகர் விஜய் சேதுபதி தயாரிக்கும் படத்துக்கு ‘சென்னை பழனி மார்ஸ்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

சென்னை: நடிகர் விஜய் சேதுபதி தயாரிக்கும் படத்துக்கு ‘சென்னை பழனி மார்ஸ்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

பிஜு விஸ்வநாத் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2015-ம் ஆண்டு ரிலீஸான படம் ‘ஆரஞ்சு மிட்டாய்’. இப்படத்தை விஜய் சேதுபதி தனது புரொடக்‌ஷன்ஸ் தயாரித்திருந்தார். மேலும் அப்படத்தை  பிஜு விஸ்வநாத்துடன் சேர்ந்து விஜய் சேதுபதியும் எழுதினார். 

ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங்கையும் பிஜு விஸ்வநாத் பார்க்க, ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்தார். விமர்சன ரீதியாக படம் வெற்றி பெற்றது. தற்போது இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. சென்னை பழநி மார்ஸ் என்று பெயரிட்டுள்ள இப்படத்தை மீண்டும் விஜய் சேதுபதி – பிஜு விஸ்வநாத் இணைந்து எழுதியுள்ளனர்.

ஆனால் அந்த படத்திற்கு இந்த படத்திற்கும் ஒரே ஒரு வித்தியாசம் மட்டுமே இதில் விஜய் சேதுபதிக்கு பதிலாக   புதுமுக நடிகர் நடிக்கவிற்கின்றனர். நிரஞ்சன் பாபு இசையமைக்கும் இந்தப் படத்தில், 6 பாடல்களையும் விக்னேஷ் ஜெயபால் எழுதியுள்ளார். 

இந்த நிலையில் வரும் 22-ம் தேதி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை விஜய் சேதுபதி வெளியிடுகிறார். மேலும் அந்த படத்தை போலவே இவர்களின் காம்போ இதில் ஒர்க் அவுட் ஆகுதா என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்.