மிஸ்டர் லோக்கல் படத்தின் தோல்வியைப் பகிரங்கமாக ஒப்புக்கொண்ட சிவகார்த்திகேயன்

 

மிஸ்டர் லோக்கல் படத்தின் தோல்வியைப் பகிரங்கமாக ஒப்புக்கொண்ட சிவகார்த்திகேயன்

இனி வரும் திரைப்படங்கள் எல்லாம் வெற்றியடையும் என்று சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். 

சென்னை: இனி வரும் திரைப்படங்கள் எல்லாம் வெற்றியடையும் என்று சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். 

கனா படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து தற்போது சிவகார்த்திகேயன் சின்னதிரை தொகுப்பாளரும்,நடிகருமான ரியோவை வைத்து ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ படத்தை தயாரித்துள்ளார் . இப்படத்தை பிளாக் ஷீப் குழுவில் உள்ள கார்த்திக் வேணுகோபாலன் இயக்கியுள்ளார். மேலும், ஷிரின் காஞ்வாலா, ராதா ரவி, ஆர்.ஜே விக்னேஷ்காந்த், நாஞ்சில் சம்பத் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் வேலைகள் அனைத்தும் முடிவுயடைந்த நிலையில் வரும்  ஜூன் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது. 

siva

அதையொட்டி படத்தின் ஆடியோ மற்றும் ட்ரைலர் வெளியிட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. அப்போது அதில் பேசிய சிவகார்த்திகேயன் ‘அனைவருக்கும் வணக்கம். நான் பட தயாரிப்பு நிறுவனம் தொடங்கியது நண்பர்களுக்காகத் தான். அதன் அடிப்படையில் தான் கனா படத்தை தயாரித்தேன். இரண்டாவது படம் என்ன என்பது பற்றி யோசிக்கும் போது தான் ரியோ மூலம் பிளாக்‌ஷீப் கதை கேட்டேன். பின்பு தான் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தை தயாரிக்க முடிவு செய்தேன். இப்படம்  அரசியல் நையாண்டி கலந்த படமாக  இருக்கும். அதைத்தாண்டி படத்தில் ஒரு நேர்மையையும் இருக்கும். இந்த படக்குழுவில் உள்ள அனைவரிடமும் அது இருக்கிறது. 

nnor

சமீபத்தில் நான் நடித்து வெளியான மிஸ்டர் லோக்கல் படம் நாங்கள் எதிர்பார்த்த அளவு ஓடவில்லை. அதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன. ஆனால் அந்த படம் தயாரிப்பாளருக்கு நஷ்டத்தை ஏற்படுத்தவில்லை. இருப்பினும் படம் சரியாக போகவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன். நான் நடித்த ஒரு படம் ஓடவில்லை என்பதற்காக நான் விழுந்துவிட மாட்டேன். தோற்றாலும் நான் இங்கு நிற்கிறேன். அது தான் முக்கியம். ஒரு மேட்சில் ஒவுட்டாகிவிட்டால் அத்துடன் வாழ்க்கை முடிந்துவிடாது. தொடர்ந்து வெறியோடு ஓடிக்கொண்டே இருப்பேன். மேலும் எனது அடுத்தடுத்தப் படங்கள் மக்களுக்குப் பிடிக்கும் வகையில் நிச்சயம் இருக்கும். உண்மையான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பேன். நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா, நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா” என்று கூறியுள்ளார்.