மிஸ்டர் அண்டு மிசஸ் சின்னத்திரை வெற்றியாளர் இவர் தான்! 

 

மிஸ்டர் அண்டு மிசஸ் சின்னத்திரை வெற்றியாளர் இவர் தான்! 

`மிஸ்டர் அண்டு மிசஸ் சின்னத்திரை’ ரியாலிட்டி ஷோவின் இறுதிச் சுற்றில் டைட்டில் வின்னராகத் தேர்வு செய்யப்பட்டவர்கள் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. 

சென்னை: `மிஸ்டர் அண்டு மிசஸ் சின்னத்திரை’ ரியாலிட்டி ஷோவின் இறுதிச் சுற்றில் டைட்டில் வின்னராகத் தேர்வு செய்யப்பட்டவர்கள் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோகளில் ஒன்று தான் மிஸ்டர் அண்டு மிசஸ் சின்னதிரை. சின்னத்திரை நடிகர், நடிகைகள் திரைக்கு முன்னால் கொடுக்கப்பட்ட காட்சியை  சிறப்பாக நடித்திருப்பதை பார்த்திருப்போம். ஆனால் திரைக்கு பின்னல் அவர்களின் காதல், திறமை, அன்பு போன்றவை எப்படி இருக்கும் என்பதை காட்டவே இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. 

chinnathirai

கடந்த ஜனவரி 20ம் தேதி மூலம் ஒளிபரப்பாகிய ஷோவில் சின்னதிரையின் நிஜத் தம்பதிகளனா செந்தில் கணேஷ்-ராமலட்சுமி, மணிமேகலை-உசேன், சங்கர பாண்டியன் – ஜெயபாரதி, நிஷா – ரியாஸ், திரவியம் – ரித்து, தங்கதுரை – அருணா, அந்தோணிதாசன் – ரீட்டா, சுபர்ணன் – பிரியா, பிரின்ஸ் – பிரியா ஆகியோர் கலந்து கொண்டனர். 

பிக் பாஸ் புகழ் விஜயலட்சுமி,தேவதர்ஷினி, கோபிநாத் ஆகியோர் நடுவர்களாக பங்குபெற்றனர். இதில் போட்டியாளர்களுக்கு பல்வேறு விதமான போட்டிகள் நடைபெற்றது. அவற்றை வெற்றிகரமாகக் கடந்து ஆறு ஜோடிகள் இறுதிச் சுற்றுக்குத் தேர்வாகினர். இந்த நிலையில் தற்போது சில தினங்களுக்கு முன்பு இந்த நிகழ்ச்சியின் இறுதிச் சுற்று நடைபெற்றது. அதை இரண்டு சுற்றுகளாக நடத்தினர் 

மிஸ்டர் அண்டு மிசஸ் சின்னத்திரை

அதில் அனைத்து டாஸ்குகளிலும் வென்று `மிஸ்டர் அண்டு மிசஸ் சின்னத்திரை 2019’ பட்டத்தை சங்கர பாண்டியன் – ஜெயபாரதி ஜோடி தட்டி சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த இறுதிச் சுற்று நாளை மாலை 6.30க்கு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது. 

சங்கர பாண்டியன் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘சரவணன் மீனாட்சி’ தொடரின் மூலம் பிரபலமடைந்தது குறிப்பிடத்தக்கது.