மிக கனமழைக்கு வாய்ப்பு! இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

 

மிக கனமழைக்கு வாய்ப்பு! இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தமிழகத்தில் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் மிக கனமழை தொடரும் என்று இந்திய  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் மிக கனமழை தொடரும் என்று இந்திய  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

rain

மேற்கு மத்திய வங்கக்கடல், அதனை ஒட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக 24 மணி நேரத்திற்கு தமிழகம், புதுவையின் பெரும்பாலான பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், தி.மலை, திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கும், சென்னை, கடலூர், விழுப்புரம், தஞ்சை, திருவாரூர், நாகை, அரியலூர், பெரம்பலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, சிவகங்கை, ராமநாதபுரம், நாமக்கல், சேலம், புதுக்கோட்டை, குமரியில் கனமழைக்கும் வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.