மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கச் சிறப்பு முகாம் : மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி அறிவிப்பு!

 

மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கச் சிறப்பு முகாம் : மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி அறிவிப்பு!

கே.கே.நகரில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில வள மற்றும் பயிற்சி மையத்தில்  சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக  மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி செய்திக் குறிப்பு ஒன்றை நேற்று வெளியிட்டுள்ளார்

மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கச் சென்னை கே.கே.நகரில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில வள மற்றும் பயிற்சி மையத்தில்  சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக  மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி செய்திக் குறிப்பு ஒன்றை நேற்று வெளியிட்டுள்ளார்.

ttb

அதில், பார்வை திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள், செவித்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள், கை, கால் இயக்க குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் முறையே திங்கள், செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் அடையாள அட்டை வழங்குவதற்கான சிறப்பு முகாம் சென்னை கே.கே.நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் போடப்பட்டுள்ளது என்றும் அந்த முகாமில் மாற்றுத்திறனாளிகளின் பாதிப்பு சதவீதத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். 

ttn

அந்தந்த நோய்களுக்கேற்ப மாதத்தின் 4 ஆவது வாரத்தில் நரம்பியல் மருத்துவ நிபுணர், மனநல மருத்துவர் உள்ளிட்ட சிறப்பு மருத்துவர்கள் வந்து மாற்றுத்திறனாளிகளுக்கான குறைபாட்டை ஆய்வு செய்து பாதிப்பின் சதவீதத்துடன் மருத்துவ சான்றிதழ் வழங்கவும், அதன் அடிப்படையில் அடையாள அட்டை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆதலால் அந்த முகாமில் கலந்து கொண்டு, மாற்றுத்திறனாளிகள்  தேசிய அடையாள அட்டையைப் பெற்றுப் பயனடையலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.