மாரி செல்வராஜ் இயக்கத்தில் இரண்டாவது படம் நடிக்கிறாரா தனுஷ்!?

 

மாரி செல்வராஜ் இயக்கத்தில் இரண்டாவது படம் நடிக்கிறாரா தனுஷ்!?

‘பரியேறும் பெருமாள்’ படத்தின் மூலம் தமிழ்திரையுலகில் நுழைந்த மாரிசெல்வராஜ் தனது முதல் படத்திலேயே தனி முத்திரை பதித்தார். கர்ணன் ஷூட்டிங் ஸ்பாட்டில் மாரிசெல்வராஜ் காட்சிகளை நுணுக்கமாக எடுக்கும் விதத்தைப் பார்த்து ஆச்சர்யப்பட்டிருக்கிறார் தனுஷ்.

அசுரனின் மாபெரும் வெற்றிக்கு பின், நடிகர் தனுஷின் மீதான எதிர்ப்பார்ப்பு எகிறியுள்ளது. அடுத்து அவர் யார் இயக்கத்தில் நடிக்கபோகிறார் என்று அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து முடித்துள்ள தனுஷ், அடுத்து மாரிசெல்வராஜ் இயக்கத்தில் ‘கர்ணன்’ என்று தலைப்பிடப்பட்ட படத்தில் நடித்து வருகிறார்.

karnan.jpg1

‘பரியேறும் பெருமாள்’ படத்தின் மூலம் தமிழ்திரையுலகில் நுழைந்த மாரிசெல்வராஜ் தனது முதல் படத்திலேயே தனி முத்திரை பதித்தார். கர்ணன் ஷூட்டிங் ஸ்பாட்டில் மாரிசெல்வராஜ் காட்சிகளை நுணுக்கமாக எடுக்கும் விதத்தைப் பார்த்து ஆச்சர்யப்பட்டிருக்கிறார் தனுஷ். தவிர, காட்சிகளை தேவையில்லாமல் எடுத்துவிட்டு எடிட்டிங்கில் நீக்கும் இயக்குநர்களுக்கு மத்தியில், தேவையான அளவு மட்டுமே காட்சிகளை நேர்த்தியாகவும் துல்லியமாகவும் படப்பிடிப்பு நடத்துகிறாராம் மாரி செல்வராஜ்.

மாரி செல்வராஜின் இயக்கத் திறமையை கண்டு வியந்த தனுஷ், கர்ணன் படத்திற்கு பின் மீண்டும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வந்துள்ளது.‘கர்ணன்’ படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கிறார். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

karnan.jpg3