மாமியார் கொடுமையால் ஒரு வயது குழந்தையை ஆற்றில் தூக்கிப் போட்டுக் கொன்ற கொடூர தாய்!!

 

மாமியார் கொடுமையால் ஒரு வயது குழந்தையை ஆற்றில் தூக்கிப் போட்டுக் கொன்ற கொடூர தாய்!!

கர்நாடகா மாநிலத்தில் பெற்ற ஒரு வயது குழந்தையை தாய் ஆற்றில் தூக்கிப்போட்டு கொன்ற கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலத்தில் பெற்ற ஒரு வயது குழந்தையை தாய் ஆற்றில் தூக்கிப்போட்டு கொன்ற கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உடுப்பி மாவட்டம் குந்தபூர் நகரை அடுத்த யதாமோகே கிராமத்தைச் சேர்ந்தவர் ரேகா. இவர் தனது ஒரு வயது குழந்தையை காணவில்லை எனக்கூறி கடந்த 11 ஆம் தேதி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரில் அடையாளம் தெரியாத சில மர்ம நபர்கள் வீட்டிலிருந்த குழந்தையை கடத்தி சென்று விட்டதாக கூறியிருந்தார். இதையடுத்து காவல்துறையினர் குழந்தை காணாமல்போனதை பற்றி அக்கம்பக்கத்தினர் மற்றும் ரேகாவின் முதல் மகனிடமும் விசாரணை மேற்கொண்டனர். அப்போது என் தங்கையை அம்மா தான் ஆற்றில் மூழ்கடித்து கொன்றார்கள் எனவும், என்னையும் கொல்ல பாத்தார்கள் என்றும் அந்த சிறுவன் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளான். இதையடுத்து தான் நாடகமாடியதை ரேகா ஒப்புக் கொண்டார். ஏன் குழந்தையை கொன்றீர்கள் என கேட்டதற்கு மாமியார் கொடுமை அதிகமாக உள்ளது. எனவே குழந்தைகளை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்ய முடிவெடுத்தேன் என தெரிவித்துள்ளார். இதுகுறித்து இரவுக் காவலாளியாக வேலை பார்க்கும் ரேகாவின் கணவன் சந்தோஷுக்கு தெரியவந்தபோது அவர் துயரத்தில் துடித்தார்.