மாமனாரை மணந்த மணப்பெண்: பீகாரில் வினோதம்

 

மாமனாரை மணந்த மணப்பெண்: பீகாரில் வினோதம்

திருமண தினத்தன்று மணமகன் வேறு ஒரு பெண்ணுடன் ஓட்டம் பிடித்ததால், மாமனாரை மணப்பெண் திருமணம் முடித்த வினோத சம்பவம் பீகாரில் நடந்துள்ளது

பாட்னா: திருமண தினத்தன்று மணமகன் வேறு ஒரு பெண்ணுடன் ஓட்டம் பிடித்ததால், மாமனாரை மணப்பெண் திருமணம் முடித்த வினோத சம்பவம் பீகாரில் நடந்துள்ளது.

பீகார் மாநிலத்தின் சமஸ்திபூர் பகுதியை சேர்ந்தவர் ரோஷன் லால் (65). இவரது மகனுக்கும், ஸ்வப்னா (21) என்ற பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இந்நிலையில், திருமண தினத்தன்று ரோஷன் லாலின் மகன் திடீரென தான் காதலித்து வந்த வேறு ஒரு பெண்ணுடன் ஓட்டம் பிடித்துள்ளார்.

இதையறிந்த மணமகள் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். மேலும், திருமணம் நிற்பதால் கவுரம் பாதிக்கப்படும் என கருதிய மணப்பெண் ஸ்வப்னாவின் குடும்பத்தினர், மணமகனின் தந்தை ரோஷன் லாலிடம் தங்களது பெண்ணை திருமணம் செய்து கொள்ளத் தயாரா என கேட்டுள்ளனர். இதைகேட்டு அதிர்ந்த ரோஷன்லால் முதலில் மறுப்பு தெரிவித்தாலும், பின்னர் ஒப்புக் கொண்டார். இதையடுத்து, 65 மாமனாருடன் 21 வயது ஸ்வப்னாவுக்கு திருமணம் அரங்கேறியது.