மாநிலங்களைவைத் தேர்தலில் வைகோ போட்டி!

 

மாநிலங்களைவைத் தேர்தலில் வைகோ போட்டி!

தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குத் தேர்வான 6 பேரின் பதவிக்காலம் இம்மாதம் 24ஆம் தேதியுடன் முடிவடைகிறது

மாநிலங்களவைத் தேர்தலில் மதிமுக சார்பில் வைகோ போட்டியிடுவதாக மதிமுக கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

vaiko

தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குத் தேர்வான 6 பேரின் பதவிக்காலம் இம்மாதம் 24ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதற்கான தேர்தல்  வரும் 18 ஆம் தேதி நடைபெறும் என்று  ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. திமுக சார்பில் வழக்கறிஞர் பி.வில்சன், தொமுசவை சேர்ந்த சண்முகம் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.  அதேபோல் கடந்த மக்களவைத் தேர்தலின் போது ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி, மதிமுகவுக்கு ஒரு தொகுதியை வழங்க திமுக முடிவெடுத்த நிலையில், அதன்படி மதிமுகவுக்கு ஒரு இடம் வழங்கியுள்ளது. 

vaiko

இந்நிலையில் மதிமுகவின் வேட்பாளர் யார் என்பதைத் தீர்மானிக்கும் கூட்டம் மதிமுக சார்பில் இன்று நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடுவார் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.