மாணவி ஃபாத்திமா மரணத்திற்கு நீதிவிசாரணை வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

 

மாணவி ஃபாத்திமா மரணத்திற்கு நீதிவிசாரணை வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

மாணவி ஃபாத்திமா லத்திஃப் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதற்கு இரங்கலைத் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ள நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான், மாணவியின் மரணத்திற்கு உரிய நீதிவிசாரணை வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  கடந்த ஓராண்டில் மட்டும் அங்கு நடக்கும் 5வது தற்கொலைச் சம்பவம் இது.

மாணவி ஃபாத்திமா லத்திஃப் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதற்கு இரங்கலைத் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ள நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான், மாணவியின் மரணத்திற்கு உரிய நீதிவிசாரணை வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  கடந்த ஓராண்டில் மட்டும் அங்கு நடக்கும் 5வது தற்கொலைச் சம்பவம் இது.

fathima

மத ரீதியாக தொடுக்கப்பட்ட உளவியல் தாக்குதல்கள் தான் மாணவியின் மரணத்திற்குக் காரணமாக அமைந்திருக்கிறது என்பது தெள்ளத் தெளிவாக உறுதியாகியிருக்கிறது.  மேலும், இந்த விவகாரத்தில் தமிழக அரசு சீரிய கவனமெடுத்து உயிரிழந்த மாணவி ஃபாத்திமாவின் மரணத்திற்கு உரிய நீதிவிசாரணை நடத்தி, அவரது தற்கொலைக்குக் காரணமான பேராசிரியர்களைக் கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். 

seeman

சென்னை ஐஐடியில் உயிரிழந்த மாணவர்களின் மரணம் குறித்து ஆய்வு செய்வதற்கு உரிய குழுவை அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கும் சீமான், அதை செய்ய மறுக்கும் பட்சத்தில் மாநில அளவில் மிகப் பெரும் போராட்டங்களை முன்னெடுக்கப் போவதாகவும் எச்சரிப்பதாக அறிக்கையில் கூறியிருக்கிறார்.