மாணவியின் பேச்சை கேட்டு மேடையில் கதறி அழுத சூர்யா
அகரம் அறக்கட்டளை ஒன்றை நடத்தி வருகிறார். இதன் மூலம் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர்.
நடிகர் சூர்யாசினிமாவை தாண்டி தகுதியிருந்தும் படிக்க வசதியில்லாமல் வறுமையில் வாடும் மாணவர்களை படிக்க வைக்க, அகரம் அறக்கட்டளை ஒன்றை நடத்தி வருகிறார். இதன் மூலம் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை தியாகராயநகரில் அகரம் அறக்கட்டளை சார்பில், வித்தியாசம்தான் அழகு, உலகம் பிறந்தது நமக்காக ஆகிய நூல்களின் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் அகரம் அறக்கட்டளை நிறுவனர் சூர்யா, பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
#Surya#Agaram
♥️♥️♥️♥️♥️ @Suriya_offl ♥️♥️♥️♥️♥️ https://t.co/Adb94H1rOl— Wiki Shelby (@VickysBliss) January 5, 2020
அப்போது மேடையில் பேசிய மாணவி ஒருவர், தனது வாழ்வில் எதிர்கொண்ட துயரங்கள் குறித்து கண்ணீர் மல்க பேசினார். இதை கேட்டு மேடையிலிருந்த சூர்யா கண்ணீர் வடித்ததுடன், எழுந்து சென்று மாணவியைத் தேற்றினார். இந்த செயல் காண்போரை நெகிழ்ச்சியடையச் செய்தது.