மாணவியிடம் சில்மிஷம் செய்த ஆசிரியர்: பூட்டி வைத்து உதைத்த பொதுமக்கள்!

 

மாணவியிடம் சில்மிஷம் செய்த ஆசிரியர்: பூட்டி வைத்து உதைத்த பொதுமக்கள்!

பள்ளி  மாணவிக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியரை பொதுமக்கள் வகுப்பறையில் பூட்டி வைத்து தர்ம அடி கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம்: பள்ளி  மாணவிக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியரை பொதுமக்கள் வகுப்பறையில் பூட்டி வைத்து தர்ம அடி கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை அடுத்த திருவெண்ணைநல்லூர் அருகிலுள்ள சிறுமதுரை அரசு உயர்நிலைப்பள்ளியில் பொதுத் தேர்வு நடைபெற்று வருவதால்  பத்தாம் வகுப்பு மாணவிகளுக்குச்  சிறப்பு வகுப்பு நடந்துள்ளது. ஆசிரியர் கிருஷ்ணன் மாணவிகளுக்கு   நேற்று  இரவு 8 மணி வரை சிறப்பு வகுப்பு நடத்தி உள்ளார். அப்போது ஆசிரியர் கிருஷ்ணன் மாணவி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் கூறப்படுகிறது. 

இதனை தொடர்ந்து வீட்டிற்கு சென்ற மாணவி பெற்றோரிடம் தெரிவித்து உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த  மாணவியின் உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் பள்ளியில் இருந்த ஆசிரியர் கிருஷ்ணனை தாக்கி பள்ளி வகுப்பறைகளிலேயே  வைத்து பூட்டு போட்டு விட்டு பின்னர்  போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். 

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த திருவெண்ணெய்நல்லூர் போலீசார் ஆசிரியரை மீட்கச் சென்ற போது ஊர் மக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததோடு, ஆசிரியரை கைவிலங்கு போட்டு தான் அழைத்துச் செல்ல வேண்டும் என்ற கோரிக்கையோடு போலீஸ் வாகனத்தை வெளியே விடாமல் எதிர்ப்பு தெரிவித்து காவல்துறையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் .பின்னர் பொதுமக்களைச் சமாதானம் செய்த போலீசார் ஆசிரியரை  காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று  விசாரணை செய்து வருகின்றனர். 

இதை தொடர்ந்து மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில். ஆசிரியர் கிருஷ்ணனை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார், அவரை விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர்.