‘மாணவர்களின் உயிரோடு விளையாடும் பொறுப்பற்ற செயல்’.. +1,+2 பொதுத்தேர்வு குறித்து டிடிவி தினகரன் அறிக்கை!

 

‘மாணவர்களின் உயிரோடு விளையாடும் பொறுப்பற்ற செயல்’.. +1,+2 பொதுத்தேர்வு குறித்து டிடிவி தினகரன் அறிக்கை!

அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிக்கை வெளியிட்டுள்ளார். 

கொரோனா பாதிப்பால் மக்கள் வீட்டிலேயே இருக்கும் படி அறிவுறுத்தப்பட்டு வருகிறது . அதன் காரணமாக, 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இருப்பினும், 11 மற்றும் 12 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு வழக்கம் போல நடைபெறும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இந்நிலையில் , அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிக்கை வெளியிட்டுள்ளார். 

TTN

அதில்,”உலக அளவில் வரலாறு காணாத அச்சத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனா பாதிப்பில் இருந்து தப்பிக்கஇந்தியாவும் போராடி வருகிறது. மத்திய மாநில அரசுகள் மேற்கொள்ளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் எந்த அளவு முழு ஆதரவு அளிக்கிறார்கள் என்பதை நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்பட்ட சுய ஊரடங்கே சாட்சியாகும்.  எனினும் பிரதமர் கூறியிருப்பதை போல இது மிகப்பெரிய போராட்டத்தின் தொடக்கம் தான். 

குறைந்தபட்சம் அடுத்த மூன்று வாரங்களுக்கு மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என வல்லுனர்கள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறார்கள். அதனால் தான் நாடு முழுவதும் பயணிகள் ரயில் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. பல மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. தேசிய அளவில் அனைத்து தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ள சூழலில் தமிழகத்தில் மட்டும் பிளஸ் 1 பிளஸ் 2 தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்று பழனிசாமி அரசு அறிவித்திருப்பது மாணவர்களின் உயிரோடு விளையாடும் பொறுப்பற்ற செயலாகும். எனவே எத்தனை தேர்வுகள் மீதம் இருந்தாலும் அவற்றை ஒத்திவைக்க வேண்டும்.

ttn

மத்திய அரசு தலையிட்டு சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் 3 மாவட்டங்களில் முடக்கி வைத்திருக்கும் நிலையில் இதற்குப் பிறகும் பழனிசாமி அரசு நிலைமையின் தீவிரத்தை உணராமல் செயல்படுவது சரியானதல்ல. மக்களுக்கு சூழலை விளக்கி குறைந்தபட்சம் அடுத்த மூன்று வாரங்களுக்கு தமிழகத்திலும் ஊரடங்கு அமல் படுத்தப் படுவது சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமையும். அதே நேரத்தில் அத்தியாவசியப் பொருட்களுக்கும் மருந்துகளுக்கும் தட்டுப்பாடு ஏற்படாதவாறு உரிய ஏற்பாடுகளை செய்திட வேண்டும். மேலும், கேரளா தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் அறிவிக்கப்பட்டிருப்பது போல அமைப்புசாரா தொழிலாளர்கள் உள்ளிட்டோருக்கு உதவித் தொகையையும் பழனிசாமி அரசு வழங்கவேண்டும்.  டெல்லியில் செய்திருப்பதை போன்று தனியார் நிறுவன ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அறிவிக்கப்பட வேண்டும்.

ttn

 இந்த இக்கட்டான நேரத்தில் அரசியல் கட்சிகளும் மக்களும் அரசோடு இணைந்து குறைந்தவை எதிர்கொள்ள தயாராக இருக்கும்போது பழனிசாமி அரசு மக்களை பாதிப்பின்றி காப்பாற்ற ஈகோ  பார்க்காமல் செயல்பட வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்”. என்று குறிப்பிட்டுள்ளார்.