மாட்டுத்தொழுவத்திலேயே பிறந்து, வளர்ந்தவன் நான்! ரியல் அண்ணாமலை நான்தான்!!- ஹெச். ராஜா! 

 

மாட்டுத்தொழுவத்திலேயே பிறந்து, வளர்ந்தவன் நான்! ரியல் அண்ணாமலை நான்தான்!!- ஹெச். ராஜா! 

மாட்டுத்தொழுவத்தில் பிறந்து, பால் விற்று படித்தவன் நான் என பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா தெரிவித்துள்ளார். 

மாட்டுத்தொழுவத்தில் பிறந்து, பால் விற்று படித்தவன் நான் என பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா தெரிவித்துள்ளார். 

மதுரை புட்டுத்தோப்பு மைதானத்தில் நடைபெற்றுவரும் வைகைப்பெருவிழா–2019 என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ஹெச். ராஜா, “மாட்டுத்தொழுவத்தில் பிறந்து, பால் விற்று படித்தவன் நான். பகுத்தறிவு என்ற பெயரில் காட்டுமிரண்டித்தனமான செயல்பாடுகள் நடைபெற்று வருகின்றன. பசு பாதுகாப்பு மாநாடு ஒரு சிலருக்கு பெரிய பிரச்னையாக உள்ளது. பகுத்தறிவு என்று சொல்லி மாடும், விலங்கும் ஒன்றுதான் என்று சொல்கின்றனர்.

பசுவுக்கு, இங்கு நடைபெறும் கோபூஜையை நான் ஆதரவாகப் பேசினால் அதை மதவாதம் என்கின்றனர். ஆனால் இது வாழ்க்கை முறை. விஞ்ஞானம், பகுத்தறிவு வேண்டாம். நம் முன்னோர்களின் வாழ்க்கை முறையை நாம் அப்படியே கடைபிடித்தால் போதும்.  விவசாயத்தின் அடிப்படையே மாடுகள் தான். நாட்டு மாடுகளின் இனங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப்பட்டு வருகிறது. நாட்டிலுள்ள மாடுகளை பாதுகாக்க வேண்டும்..  ரீல் லைப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினி அண்ணாமலை என்றால் ரியல் லைப்பில் அண்ணாமலையாக வாழ்ந்தவன் நான் தான்” எனக்கூறினார்.