மாட்டுச் சாணம்,கோமியம் தொடர்பான தொழிலுக்கு 60 சதவிகித நிதி உதவி… வேலையை ஆரம்பித்த பாஜக! நடுத்தெருவில் நிற்கும் தமிழகம்!

 

மாட்டுச் சாணம்,கோமியம் தொடர்பான தொழிலுக்கு 60 சதவிகித நிதி உதவி… வேலையை ஆரம்பித்த பாஜக! நடுத்தெருவில் நிற்கும் தமிழகம்!

மத்தியில் ஆளும் பாஜக கொண்டு வரும் அதிரடி திட்டங்களால் மரண பீதியில் இருக்கிறார்கள் மக்கள். நம்முடைய தமிழகத்தில் தான் தெர்மாக்கோல் அமைச்சர்கள் இருக்கிறார்கள் என்றால், நாடு முழுவதுமே இப்படி அதிரடியான திட்டங்களால் மக்களைப் படுத்தி எடுக்கும் தலைவர்கள் இருக்கத் தான் செய்கிறார்கள் போல… சரி மொத்த இந்தியாவுக்குமான வளர்ச்சி திட்டங்களை அறிவிக்கிறார்களா என்று எதிர்பார்த்தால், ஒவ்வொரு கட்சியுமே ஆட்சிக்கு வந்தவுடன், அவர்களது கட்சித் தொண்டர்களை மனதில் வைத்தே பெரும்பாலான திட்டங்களை வகுத்திருக்கிறது.

மத்தியில் ஆளும் பாஜக கொண்டு வரும் அதிரடி திட்டங்களால் மரண பீதியில் இருக்கிறார்கள் மக்கள். நம்முடைய தமிழகத்தில் தான் தெர்மாக்கோல் அமைச்சர்கள் இருக்கிறார்கள் என்றால், நாடு முழுவதுமே இப்படி அதிரடியான திட்டங்களால் மக்களைப் படுத்தி எடுக்கும் தலைவர்கள் இருக்கத் தான் செய்கிறார்கள் போல… சரி மொத்த இந்தியாவுக்குமான வளர்ச்சி திட்டங்களை அறிவிக்கிறார்களா என்று எதிர்பார்த்தால், ஒவ்வொரு கட்சியுமே ஆட்சிக்கு வந்தவுடன், அவர்களது கட்சித் தொண்டர்களை மனதில் வைத்தே பெரும்பாலான திட்டங்களை வகுத்திருக்கிறது.
பாஜகவின் ‘ஜெய் ஸ்ரீராம்’ கோஷத்திற்கு சமீபத்தில் தான், இயக்குநர் மணிரத்னம், நடிகை ரேவதி உட்பட இந்தியா முழுவதுமிருந்தும் கலைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள். இது இந்திய மக்களை அச்சுறுத்தும் அளவிற்கு சென்று கொண்டிருக்கிறது என்று எதிர்ப்பு தெரிவித்தார்கள்.
இந்நிலையில், பசுமாட்டு சாணம், சிறுநீர் தொடர்பாக தொழில் தொடங்குவோருக்கு 60 சதவீதம் வரை நிதி உதவி வழங்கப்படும் என மத்திய அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. பால் பொருட்களைத் தவிர்த்து பசுமாட்டுச் சாணம் மற்றும் பசுமாட்டு சிறுநீர் போன்றவற்றையும் சந்தைப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன் ஒரு பகுதியாக வேளாண் துறையின் கீழ் ராஷ்டிரிய காமதேனு ஆயோக் என்ற பிரிவு உருவாக்கப்பட்டு 500 கோடி ரூபாய் இத்திட்டத்திற்காக நிதி ஒதுக்கப்பட்டது. ராஷ்டிரிய காமதேனு ஆயோக்கின் தலைவராக வல்லாப் கத்திரியா என்பவர் நியமிக்கப்பட்டார்.

cow

இந்நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் பசுமாட்டுச் சாணம், சிறுநீர் போன்றவை மருத்துவம் மற்றும் விவசாயத்துக்கு பெரிதும் பயன்படுவதால் அவை தொடர்பாக தொழில் தொடங்குவோருக்கு 60 சதவீதம் நிதி உதவி வழங்கப்படும் என தெரிவித்தார். இதை தொடர்ந்து பசு மாட்டின் கழிவுகளில் உள்ள மருத்துவ குணங்கள் குறித்து ஆராய்ச்சிகள் மேற்கொள்ள உதவிகள் செய்யப்படும் என்றும், ஏற்கனவே நடத்தப்பட்டு வரும் கோ சாலைகளில், பசு வளர்போருக்கும் மற்றும் உரிமையாளர்களுக்கும் திறன் மேம்பாடு பயிற்சி அளிக்கப்படும் என்றும்  வல்லாப் கத்திரியா கூறியுள்ளார். இதன் மூலம் பால் கொடுப்பதை நிறுத்தும் பசுக்கள் நிராகரிக்கப்படுவது தடுக்கப்படும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

cow

இளைஞர்கள் பால், நெய், வெண்ணெய் போன்ற பால் சார்ந்த பொருட்களை தயாரிப்பதில் மட்டும் ஆர்வம் காட்டக் கூடாது எனவும், அவர்கள் மாட்டுசாணம், மாட்டின் சிறுநீர் கொண்டு தயாரிக்கப்படும் மருத்துவ, விவசாய பொருட்களை தயாரிப்பதில் ஆர்வம் காட்டுவதற்காகவே இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இது வரைக்கும் கூட பரவாயில்லை. ஆனால் இதற்கு மேலான அறிவிப்பு தான் தமிழகத்தை மேலும் நடுத்தெருவில் நிறுத்தி வைக்கும் செயலாக இருக்கிறது. இந்த அறிவிப்புகள் எல்லாமே தமிழ்நாட்டுக்கு கிடையாது. அரியானா, உத்திரபிரதேசம், ராஜஸ்தான், கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களை ஒருங்கிணைத்து பசு சுற்றுலா சர்கியூட் உருவாக்கப்படும் திட்டத்தை அறிவித்திருக்கிறார்கள். இந்த மாநிலங்களில் தான் நாட்டு பசுமாடுகள் இருக்கின்றன என்கிற அவர்களது அரிய கண்டுபிடிப்பு தான் காரணமாம்!