மழை வேண்டி சென்னையில் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி: பிரபல கர்நாடக இசைக்கலைஞர்கள் பங்கேற்பு!

 

மழை வேண்டி சென்னையில் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி: பிரபல கர்நாடக  இசைக்கலைஞர்கள் பங்கேற்பு!

மழை வேண்டி சென்னையில் 150-க்கும் மேற்பட்ட பிரபல கர்நாடக இசைக் கலைஞர்கள் பங்கேற்றுள்ள சிறப்பு இசை நிகழ்ச்சி ஒன்று தற்போது நடைபெற்று வருகிறது. 

சென்னை: மழை வேண்டி சென்னையில் 150-க்கும் மேற்பட்ட பிரபல கர்நாடக இசைக் கலைஞர்கள் பங்கேற்றுள்ள சிறப்பு இசை நிகழ்ச்சி ஒன்று தற்போது நடைபெற்று வருகிறது. 

water

தமிழகத்தில் வரலாறு காணாத தண்ணீர் பஞ்சம் நிலவி வருகிறது. இதனால் மக்கள் குடிநீர் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இந்தச் சூழலில்  சர்வதேச கர்நாடக இசைக் கலைஞர்கள் சங்கம் சார்பில்  150-க்கும் மேற்பட்ட கர்நாடக இசைக்கலைஞர்கள் மழை வேண்டி சென்னை தியாகராய நகரில் உள்ள ஸ்ருங்கேரி மடத்தில்  இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்தி வருகின்றனர். இதில்  கர்நாடக இசைக்கலைஞர்களான  சுதா ரகுநாதன் , பாம்பே சிஸ்டர்ஸ், நித்யஸ்ரீ மகாதேவன், அருணா சாய்ராம் உள்ளிட்ட 150க்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்கள் பங்கேற்று மழை தரக்கூடிய ராகமான அமிர்தவர்ஷினி, கேதாரம், ஆனந்த பைரவி உள்ளிட்ட கர்நாடக இசை ராகங்களை  பாடி வருகின்றனர். 

nithayshree

இந்த நிகழ்ச்சியானது காலை 9 மணிக்கு துவங்கிய இந்த நிகழ்ச்சி இரவு 9 மணி வரை 12 மணி நேரம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.