மழை வரும் முன்னே, டெங்கு வரும் முன்னே! மாநகராட்சி ஆணையரின் அறிவுரை!

 

மழை வரும் முன்னே, டெங்கு வரும் முன்னே! மாநகராட்சி ஆணையரின் அறிவுரை!

பொதுமக்கள் தங்கள் இருப்பிடங்களை சுகாதாரமாக வைத்துக்கொள்ளவும், தண்ணீர் தேங்குவதை தவிர்க்கவும் கேட்டுக் கொண்டார். மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் அமைப்பது குறித்து உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக கூறிய மாநகராட்சி ஆணையர், முதல் கட்டமாக சென்னையில் இரண்டு லட்சம் வீடுகளில் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

சரியான பருவத்துக்கு மழை பெய்யலேன்னா, டெல்டா பக்கம் விவசாயம் செய்யமுடியாது, சென்னைப்பக்கம் குடிக்க தண்ணீர் இருக்காது. அதுவே மழை பொத்துக்கொண்டு ஊத்தினால், மழைநீர் தேங்கி டெங்கு உள்ளிட்ட அடுத்த பிரச்னை எட்டிப்பார்க்க ஆரம்பிக்கும். வாளு போய் கத்தி வந்தது டும் டும் டும்தான். எனவே, பருவமழை காலங்களில் உருவாகும் டெங்கு காய்ச்சலை தடுக்க பொதுமக்கள் தங்கள் இருப்பிடங்களை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Dengue preventive measures

டெங்கு காய்ச்சலை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து அரசு மற்றும் தனியார் மருத்துவர்களுக்கான பயிற்சி கூட்டம் சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. பயிற்சியின்போது பேசிய ஆணையர், பொதுமக்கள் தங்கள் இருப்பிடங்களை சுகாதாரமாக வைத்துக்கொள்ளவும், தண்ணீர் தேங்குவதை தவிர்க்கவும் கேட்டுக் கொண்டார். மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் அமைப்பது குறித்து உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக கூறிய மாநகராட்சி ஆணையர், முதல் கட்டமாக சென்னையில் இரண்டு லட்சம் வீடுகளில் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.