மழையில் ஊறி இடிந்து விழுந்த 3 மாடிக் கட்டிடம் : ஒருவர் படுகாயம்..!

 

மழையில் ஊறி இடிந்து விழுந்த 3 மாடிக் கட்டிடம் : ஒருவர் படுகாயம்..!

அரக்கோணம் அடுத்த ஆயர்பாடியில் லட்சுமி கணேஷ் என்பவருக்குச் சொந்தமான 3 மாடிக் கட்டிடம் உள்ளது.

தமிழகத்தில் மழைக் காலம் துவங்கியதால் அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. சேலம் மாவட்டத்தில் தொடர்ந்து 4 நாட்களாகக் கன மழை பெய்து வந்தது. அரக்கோணம் அடுத்த ஆயர்பாடியில் லட்சுமி கணேஷ் என்பவருக்குச் சொந்தமான 3 மாடிக் கட்டிடம் உள்ளது. அதில், முதல் மாடியில் 1 குடும்பமும், இரண்டாவது மாடியில் 2 குடும்பங்களும் வாடகைக்கு வசித்து வருகின்றன. அரக்கோணத்தில் பெய்து வந்த கன மழையில் ஊறிய அந்த அடுக்குமாடி கட்டிடம் இன்று அதிகாலை 3 மணியளவில் இடிந்து விழுந்து தரைமட்டமாகியது. 

Building

இந்த விபத்தில் முதல் மாடியில் தங்கிக் கொண்டிருந்த ஒரு நபர் மட்டும் சிக்கிக் கொண்டார். இடிபாடுகளில் சிக்கியதால் அவருக்குப் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இரண்டாவது தளத்தில் வசித்து வந்த இரண்டு குடும்பங்களும் வெளியூருக்குச் சென்றிருந்தனர்.

Building

முதல் தளத்திலிருந்தவரை தவிர வேறு யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. இந்த 3 மாடிக் கட்டிடம் சரிந்து விழுந்ததில், அந்த வீட்டின் அருகே இருந்த ஒரு கடையும், ஒரு வீடும் சேதமடைந்துள்ளது. இந்த தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், விபத்தில் சிக்கிய நபரை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.