மல்லிகை பூ என்றால் ஜெயலலிதாவுக்கு கொள்ளை பிரியம்; கல்யாணம் செய்து கொள்ளவும் ஆசைப்பட்டார்!!!

 

மல்லிகை பூ என்றால் ஜெயலலிதாவுக்கு கொள்ளை பிரியம்; கல்யாணம் செய்து கொள்ளவும் ஆசைப்பட்டார்!!!

கல்யாணம் செய்து கொள்ள வேண்டும். குழந்தை பெற்றுக் கொண்டு குடும்பம் நடத்த வேண்டும் என மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஆசைகள் இருந்ததாக சக நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா மனம் திறந்துள்ளார்

சென்னை: கல்யாணம் செய்து கொள்ள வேண்டும். குழந்தை பெற்றுக் கொண்டு குடும்பம் நடத்த வேண்டும் என மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஆசைகள் இருந்ததாக சக நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா மனம் திறந்துள்ளார்.

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5-ம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். ஜெயலலிதாவின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி தனியார் தொலைகாட்சி ஒன்றில் ஜெயலலிதாவுடனான தனது நினைவுகளை பகிர்ந்து கொண்ட சக நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா, மல்லிகைப்பூ என்றால் ஜெயலலிதாவுக்கு கொள்ளைப் பிரியம். அதேபோல ஸ்வீட்டும் அவருக்கு அதிகம் பிடிக்கும். எனக்கும் ஸ்வீட் பிடிக்கும் என்பதால், நாங்கள் இருவரும் சேர்ந்து நிறைய ஸ்வீட்ஸ் சாப்பிட்டிருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், நிறையப் படிக்க வேண்டும். கல்யாணம் செய்துகொள்ள வேண்டும். குழந்தை பெற்றுக்கொண்டு, குடும்பம் நடத்தி சிறப்பாக வாழவேண்டும்  என்றும் ஜெயலலிதாவுக்குள் ஆசை இருந்ததை உணர்ந்துகொண்டேன். இதை நான் நேரடியாகக் கேட்டதில்லை. அவரும் வார்த்தையாகச் சொன்னதில்லை எனவும் நிர்மலா தெரிவித்துள்ளார்.