மலேசியாவில் இருந்து கேரளா வந்த 8 பேருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி!

 

மலேசியாவில் இருந்து கேரளா வந்த 8 பேருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி!

மலேசியாவில் இருந்து கேரளாவுக்கு வந்த 8 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று அறிகுறி கண்டறியப்பட்டுள்ளது.

கொச்சி: மலேசியாவில் இருந்து கேரளாவுக்கு வந்த 8 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று  அறிகுறி கண்டறியப்பட்டுள்ளது.

மலேசியாவில் இருந்து கேரளாவுக்கு வந்த 8 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று  அறிகுறி கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் 6 பெண்களும், 2 ஆண்களும் அடங்குவர். கொச்சிக்கு விமானம் மூலம் வந்த இவர்கள் நேற்றிரவு எர்ணாகுளத்தில் தங்கினர். அதன் பின்னர் சோட்டானிக்கரா கோயிலுக்கு அனைவரும் சென்றனர். அங்கிருந்து குருவாயூர் சென்ற 8 பேரும் தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கியிருந்தனர்.

kerala

மலேசியாவில் இருந்து வந்த இவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று அறிகுறிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து நகராட்சி சுகாதார அலுவலர்கள் அவர்களை பரிசோதனைக்கு உட்படுத்தினர். இவர்கள் தவிர மூணாறு செல்லும் வழியில் குருவாயூருக்கு வந்த 20 பேர் அடங்கிய குழுவையும் மருத்துவ சுகாதார அலுவலர்கள் சோதனைக்கு உட்படுத்தினர். அவர்கள் இணையதளம் மூலம் விடுதியை முன்பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.