மலிவு விலையில் வீட்டு மனைகள்! நம்பி வாங்குனா நாங்க பொறுப்பு இல்ல- அரசு அதிரடி

 

விளம்பரங்களை நம்பி வீட்டுமனைகளை வாங்க வேண்டாம் என மக்களுக்கு காஞ்சிபுரம் ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மலிவு விலையில் வீட்டு மனைகள்! நம்பி வாங்குனா நாங்க பொறுப்பு இல்ல- அரசு அதிரடி

விளம்பரங்களை நம்பி வீட்டுமனைகளை வாங்க வேண்டாம் என மக்களுக்கு காஞ்சிபுரம் ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

காசா கிராண்ட் என்ற நிறுவனம் கடந்த 17 ஆம் தேதி தினசரி நாளிதழ்களில் காஞ்சிபுரம் மாவட்டம்,திருப்போருர் வட்டம், தாழம்பூர் கிராமத்தில் வீட்டு மனைகள் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகிறது என்று குறிப்பிட்டு நாளிதழ்களில் பெரிய 
விளம்பரம் செய்யப்பட்டது.

Plot

தாழம்பூர் கிராமம் புல எண்கள்,162/1, 163/1, 163/2, 164/1 மற்றும் 164/2 உள்ளிட்ட பல புலங்கள் அடங்கிய மனைப்பிரிவுகள் மற்றும் மனைகள் தொடர்பான விவரங்களை விசாரணை செய்ய அரசு உத்தரவிட்டு அதனடிப்படையில் விசாரணை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.எனவே தாழம்பூர் கிராமத்தில் மேற்கண்ட புலங்கள் தொடர்பாக அரசு உத்தரவின்படி விசாரணை நடைபெற்று வருவதால் காசா கிராண்ட் நிறுவனம் அளிக்கும் விளம்பரங்களை நம்பி பொது மக்கள் ஏமாற வேண்டாம் என்றும், விளம்பரத்தை நம்பி மனைகள் மற்றும் வீடுகள் வாங்கினால் பின்னர் ஏற்படும் விளைவுகளுக்கு அரசு பொறுப்பேற்காது என்றும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார்.