மறு அறிவிப்பு வரும்வரை புதுச்சேரியில் 5 ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை! 

 

மறு அறிவிப்பு வரும்வரை புதுச்சேரியில் 5 ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை! 

130க்கு மேற்பட்ட உலக நாடுகளில் பரவி அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவியுள்ளது. இந்தியாவில் சுமார் 100க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளது.

130க்கு மேற்பட்ட உலக நாடுகளில் பரவி அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவியுள்ளது. இந்தியாவில் சுமார் 100க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸால் இரண்டு பேர் உயிரிழந்தையடுத்து மக்களின் பீதி இன்னும் அதிகரித்தது. கொரோனா வைரஸ் எளிதில் குழந்தைகளுக்குப் பரவும் என்பதால் தமிழகத்தில் உள்ள ப்ரீ கேஜி, எல்.கே.ஜி மற்றும் யுகேஜி வகுப்பு மற்றும் 5 ஆம் வகுப்புவரை வரும் 31 ஆம் வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

School

இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் மறு அறிவிப்பு வரும் வரை ப்ரீ கேஜி முதல் 5 ஆம் வகுப்பு வரை நாளை முதல் விடுமுறை விடப்படுவதாக அம்மாநில கல்வித்துறை அமைச்சர் கமலகண்ணன் அறித்துள்ளார்.