மர்ம விலங்கு கடித்து, ரத்த காயங்களுடன் இறந்து கிடந்த 15க்கு மேற்பட்ட செம்மறி ஆடுகள் !

 

மர்ம விலங்கு கடித்து, ரத்த காயங்களுடன் இறந்து கிடந்த 15க்கு மேற்பட்ட செம்மறி ஆடுகள் !

ஆடுகளை இவரது விவசாய நிலத்தின் அருகே மேய விட்டு, பின்னர் அவரது வீட்டில் உள்ள பட்டிக்குள் ஆடுகளை அடைத்து விடுவது வழக்கம்.

கரூர் மாவட்டம் ஆத்தூர் கிராமம் அருகே உள்ள பெரிய வடுக பட்டி பகுதியில் வசித்து வருபவர் சிவசாமி. இவருக்குச் சொந்தமான விவசாய நிலம் ஒன்று ஆத்தூர் சிப்காட் அருகே உள்ளது. விவசாயம் செய்வது மட்டுமல்லாமல் 40க்கும் மேற்பட்ட ஆடுகளையும் இவர் வளர்த்து வருகிறார். அந்த ஆடுகளை இவரது விவசாய நிலத்தின் அருகே மேய விட்டு, பின்னர் அவரது வீட்டில் உள்ள பட்டிக்குள் ஆடுகளை அடைத்து விடுவது வழக்கம். அதே போல, நேற்று இரவும் ஆடுகளைப் பட்டிக்குள் அடைத்து விட்டு உறங்கியுள்ளார். 

ttn

காலையில் சிவசாமி எழுந்து பார்த்த போது, அவரது பட்டியிலிருந்த 15 செம்மறி ஆடுகள் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்துள்ளன. அதில் சில ஆடுகள் உயிருடன் இருந்துள்ளன. அதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சிவசாமி வீட்டின் அருகே இருப்பவர்களை அழைத்து உயிருடன் இருந்த ஆடுகளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். இச்சம்பவம் குறித்து ஆத்தூர் கிராம நிர்வாக அதிகாரி மற்றும் கால்நடை மருத்துவ குழுவினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

அந்த ஆடுகளை அப்பகுதியில் இருக்கும் வெறி நாய்கள் கடித்ததா அல்லது வேறு ஏதேனும் மர்ம விலங்கு கடித்ததா என்று ஆய்வு செய்து வருகின்றனர். இது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.