மருத்துவர் எனக்கூறி மூதாட்டிக்கு மயக்க ஊசிப்போட்டு கொள்ளையடித்த இளைஞர்!

 

மருத்துவர் எனக்கூறி மூதாட்டிக்கு மயக்க ஊசிப்போட்டு கொள்ளையடித்த இளைஞர்!

விருதுநகர் அருகே மூதாட்டிக்கு மயக்க ஊசி செலுத்திய இளைஞர், அவரிடமிருந்து ஐந்து சவரன் தங்க சங்கிலியை பறித்துச்சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மருத்துவர் எனக்கூறி மூதாட்டிக்கு மயக்க ஊசிப்போட்டு கொள்ளையடித்த இளைஞர்!

சாத்தூர் அருகே உள்ள வெம்பக்கோட்டை மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த லட்சுமியம்மாள், வீட்டின் முன்பு பெட்டிக்கடை வைத்துள்ளார். கணவரை இழந்த லட்சுமியம்மாள் தனியாக வசித்துவருகிறார். கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு பெட்டிக்கடைக்கு வந்த இளைஞர், லட்சுமியம்மாளிடம் பேச்சு கொடுத்தார். அப்போது லட்சுமி தனக்கு மூட்டுவலி அதிகமாக இருக்கிறது எனக் கூறவே, நான் மருத்துவர்தான் எனக்கூறிய அந்த இளைஞர், நான் மருந்துதருகிறேன் எனக்கூறியுள்ளார்.

மேலும், வீட்டிற்குள் லட்சுமியை அழைத்துச் சென்ற இளைஞர், மயக்க ஊசிப்போட்டு, அவரின் கழுத்திலிருந்த 5 சவரன் தங்க சங்கிலியை திருடிகொண்டு தப்பிச்சென்றார். இதுகுறித்து வெம்பக்கோட்டை காவல் நிலையத்தில் லட்சுமியம்மாள் புகார் தெரிவித்தையடுத்து, காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.