மருத்துவர் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்த விவகாரம் – 90 பேர் மீது 6 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு

 

மருத்துவர் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்த விவகாரம் – 90 பேர் மீது 6 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு

மருத்துவர் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்த விவகாரத்தில் 90 பேர் மீது 6 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சென்னை: மருத்துவர் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்த விவகாரத்தில் 90 பேர் மீது 6 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சென்னை அமைந்தகரை நெல்சன் மாணிக்கம் ரோடு பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய நரம்பியல் நிபுணரான மருத்துவர் சைமன் ஹெர்குலஸ், கடந்த சில தினங்களுக்கு முன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி அவர் நேற்று முன்தினம் உயிரிழந்தார்.

ttn

அவரது உடல் அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் கல்லறைத் தோட்டத்தில் நடந்தன. ஆனால் அந்த கல்லறையில் அடக்கம் செய்யக்கூடாது என அந்தப் பகுதியில் உள்ள பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். போராட்டம் நடத்திய 21 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்கு பதியப்பட்டது. இந்நிலையில், கொரோனாவால் இறந்த மருத்துவரை அடக்கம் செய்யவிடாமல் தடுத்த விவகாரத்தில் மறியலில் ஈடுபட்ட 90 பேர் மீது மிரட்டல் உட்பட 6 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்தால் குண்டர் சட்டம் பாயும் என சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.