மருத்துவமனையில் ‘நானும் ரௌடி தான்’ துணை நடிகர்…நேரில் சென்று ஆறுதல் கூறிய நடிகர் விஜய் சேதுபதி!
அறுவை சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் லோகேஷ் பாப்பை நடிகர் விஜய் சேதுபதி நேரில் சென்று நலம் விசாரித்துள்ளார்.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி- நயன்தாரா நடிப்பில் உருவாகிக் கடந்த 2015 ஆம் ஆண்டு திரைக்கு வந்த படம் “நானும் ரௌடி தான்”. இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தில் காமெடி நடிகராக நடித்தவர் லோகேஷ் பாப். இவர் முதன் முதலாக ஆதித்யா சேனலில் வந்த ‘மொக்கை ஆப் தி டே’ நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி வெள்ளித்திரைக்குச் சென்றார்.
சன் தொலைக் காட்சியில் வெளியாகும் பல காமெடி நிகழ்ச்சிகளில் லோகேஷ் பாப் பங்கேற்றுள்ளார். லோகேஷுக்கு திடீரென ஏற்பட்ட ஸ்டோக் காரணமாக அவருடைய இடது கை மற்றும் இடது கால் செயலிழந்து விட்டதால் மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாகவும் அதற்கு நிதி உதவி வேண்டும் என்றும் கடந்த 1 ஆம் தேதி தகவல் வெளியானது.
இதனையடுத்து லோகேஷ் பாப்பின் நண்பர் குட்டி கோபி அவரது பேஸ்புக் பக்கத்தில், லோகேஷ் பாப்புக்கு அறுவை சிகிச்சை நடந்து முடிந்து விட்டதாகவும், பண உதவி அளித்த அனைவருக்கும் நன்றி என்றும் கூறி வீடியோ ஒன்று வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில், அறுவை சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் லோகேஷ் பாப்பை நடிகர் விஜய் சேதுபதி நேரில் சென்று நலம் விசாரித்துள்ளார்.
அவருடன் ஒரே ஒரு படத்தில் நடித்த லோகேஷை, ஒரு துணை நடிகர் என்று பாராமல் விஜய் சேதுபதி மனித நேயத்துடன் நேரில் சென்று விசாரித்தது அவரது ரசிகர்களிடையே பாராட்டை பெற்றுள்ளது.