மருத்துவமனையில் ஜெயலலிதா…. இளம்பெண்ணுடன் உல்லாசத்தில் ஜெயக்குமார்: வெற்றிவேல் வெளியிட்ட பகீர் தகவல்

 

மருத்துவமனையில் ஜெயலலிதா…. இளம்பெண்ணுடன் உல்லாசத்தில் ஜெயக்குமார்: வெற்றிவேல் வெளியிட்ட பகீர் தகவல்

ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது தற்போது ஆடியோ விவகாரத்தில் சம்பந்தப்பட்டிருக்கும் பெண்ணுடன் ஜெயக்குமார் உல்லாசமாக இருந்தார் என தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ வெற்றிவேல் பகீர் தகவலை வெளியிட்டுள்ளார்.

சென்னை: ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது தற்போது ஆடியோ விவகாரத்தில் சம்பந்தப்பட்டிருக்கும் பெண்ணுடன் ஜெயக்குமார் உல்லாசமாக இருந்தார் என தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ வெற்றிவேல் பகீர் தகவலை வெளியிட்டுள்ளார்.

தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் இளம்பெண்ணை கர்ப்பமாக்கியதாக அப்பெண்ணின் தாயாரும், அமைச்சரும் பேசுவது போன்ற ஆடியோவும், ஜெயக்குமாருக்கும் இளம்பெண்ணுக்கும் குழந்தை பிறந்ததற்கான பிறப்பு சான்றிதழும் நேற்று வெளியாகி தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் இதனை அமைச்சர் ஜெயக்குமார் மறுத்துள்ளார்.

இதற்கிடையே இந்த ஆடியோவை தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ வெற்றிவேல் தான் பரப்பினார் என தகவல்கள் பரவின. மேலும் இதன் பின்னணியில் தினகரன்தான் இருக்கிறார் எனவும் ஜெயக்குமார் கூறினார்.

இந்நிலையில், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ வெற்றிவேல் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், ஜெயக்குமாருக்கு எதிராக ஆடியோ தயாரித்து வெளியிடும் அவசியம் எங்களுக்கு இல்லை. குழந்தை யாரென்று கண்டுபிடித்து டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க வேண்டும். நான் இந்த ஆடியோவை வெளியிடவில்லை. எங்களிடம் வேறு ஆடியோ இருக்கிறது. அந்த ஆடியோவை வெளியிட்டால் ஜெயக்குமார் தனது குடும்பத்துடன் தூக்கில் தொங்கிவிடுவார். ஜெயக்குமார் மீது புகார் கொடுக்க அந்த பெண் பயப்படுகிறார். அவர் அமைச்சர் பதவியில் இருந்து விலகினால் அவர் மீது அந்த பெண் புகார் கொடுப்பார்.

ஜெயக்குமார் எத்தனை பெண்களை ஏமாற்றி இருக்கிறார் என்ற லிஸ்ட் என்னிடம் இருக்கிறது. ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது அரவங்குறிச்சி இடைத்தேர்தலின் போது திண்டுக்கல் விவேரா கிராண்ட் ஹோட்டலில் அறை எண் 219-ல் அந்த பெண்ணுடன் ஜெயக்குமார் உல்லாசமாக இருந்தார். அந்த பெண்ணை ஜெயக்குமார் மனைவியாக ஏற்றுக்கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட பெண் என் பாதுகாப்பில் இல்லை. இதுபோன்ற விவகாரத்தில் முதல்வர் தலையிடாமல் இருக்க வேண்டும். ஜெயக்குமாரை முதல்வர் அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றார்.