மருதாணி நன்கு சிவக்க, நீண்ட நாட்களுக்கு நிலைக்க டிப்ஸ் !

 

மருதாணி நன்கு சிவக்க, நீண்ட நாட்களுக்கு நிலைக்க டிப்ஸ் !

பண்டிகைக் காலங்களில் மருதாணி வைத்துக் கொள்ள ஆசைப்படாத பெண்களே இருக்க மாட்டார்கள். அப்படி பண்டிகைக் காலங்களோ, திருமண வைபவங்களோ மருதாணி வைக்கும் போது, விசேஷ தினத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாகவே மருதாணி வைத்துக் கொள்ளலாம். சில பெண்களுக்கு மருதாணி ஒத்து கொள்வதில்லை. அதனால் சிலர் அதை விரும்புவதில்லை.

பண்டிகைக் காலங்களில் மருதாணி வைத்துக் கொள்ள ஆசைப்படாத பெண்களே இருக்க மாட்டார்கள். அப்படி பண்டிகைக் காலங்களோ, திருமண வைபவங்களோ மருதாணி வைக்கும் போது, விசேஷ தினத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாகவே மருதாணி வைத்துக் கொள்ளலாம். சில பெண்களுக்கு மருதாணி ஒத்து கொள்வதில்லை. அதனால் சிலர் அதை விரும்புவதில்லை. சில பேருக்கு மருதாணி வைத்தால் கை கால் இழுக்கிற மாதிரி இருக்கும். சிலருக்கு சளி பிடிக்கும்.

maruthani

இந்த பிரச்சனை இருப்பவர்கள் மருதாணியை வைத்துக் கொள்ளும் போது மருதாணி ரெடி மேட் கோன் என்றால் கையில் கடுகு எண்ணையை தேய்த்து விட்டு, உள்ளங்கையில் கொஞ்சம் தைலம், கழுத்து நரம்பு கிட்ட கொஞ்சம் தைலம், இப்படி ஒவ்வொரு ஜாயிண்ட், கை மணிகட்டு, முழங்கை ஜாயிண்ட்டில் எல்லாம் தடவி கொண்டு வைத்துப் பாருங்கள். இப்படி செய்வதால் ஜலதோஷம் பிடிப்பது குறையும். மருதாணியை வைத்துக் கொண்டு சரியாக ஒரு மணி நேரம் மட்டும் வைத்திருந்தால் போதும். மருதாணி காய்ந்ததும் அதை எடுக்கும் போது உடனே தண்ணீர் போட்டு கழுவ கூடாது. ஒரு பட்டர் பேப்பரால் அப்படியே வழித்தெடுக்க வேண்டும். கையை கழுவ கூடாது. அப்படியே கேஸ் அடுப்பை பற்ற வைத்து குளிர் காய்வது போல் கையை காட்டவும். இப்போது மறுபடியும் கொஞ்சம் தைலம் + தேங்காய் எண்ணெய் தடவி கொள்ளுங்கள். 3 மணி நேரத்திற்கு கையை கழுவ கூடாது. இவ்வாறு செய்தால் மருதாணி நன்றக சிவப்பாக பிடிக்கும்.