மரத்திற்கு இடையில் சிக்கி கொண்ட எருமை மாடு!

 

மரத்திற்கு இடையில் சிக்கி கொண்ட எருமை மாடு!

சென்னைகோயம்பேடு மார்க்கெட் 7 வது நுழைவாயில் அருகே மார்கெட்டை ஒட்டி அமைந்துள்ள காம்பவுண்ட் சுவர் மற்றும் மரத்திற்கு இடையில் எருமை மாடு ஒன்று சிக்கிக்கொண்டது.

சென்னைகோயம்பேடு மார்க்கெட் 7 வது நுழைவாயில் அருகே மார்கெட்டை ஒட்டி அமைந்துள்ள காம்பவுண்ட் சுவர் மற்றும் மரத்திற்கு இடையில் எருமை மாடு ஒன்று சிக்கிக்கொண்டது.  இதனை கண்ட அங்கிருந்த பொதுமக்கள் அந்த மாட்டை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அந்த மாட்டை மீட்க முடியாததால் கோயம்பேடு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். 

தகவலறிந்தது நிகழ்விடத்திற்கு வந்த கோயம்பேடு தீயணைப்பு அதிகாரி ராஜேந்திரன் தலைமையிலான குழு  சுவர் மற்றும் மரத்திற்கு இடையே சிக்கி இருந்த எருமை மாட்டை மீட்க முயற்சி செய்தனர். ஆனால் மீட்க முடியாததால் மரம் அறுக்கும் எந்திரம் கொண்டு மரத்தின் ஒரு பகுதியை அறுத்து நீண்ட நேரப்போராட்டத்திற்கு பிறகு அந்த எருமை மாட்டை பத்திரமாக மீட்டனர்.