மன்னித்து விடு சுஜித்… பிக் பாஸ் பிரபலங்களின் பதிவு!
5 நாட்கள் போராட்டத்திற்கு மத்தியில் நேற்றிரவு 2.30 மணியளவில் சுஜித் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
சுஜித் இறப்பு குறித்து சேரன் உள்ளிட்ட பிக் பாஸ் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
திருச்சி மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் கடந்த 25 ஆம் தேதி மாலை 5.40 மணிக்கு ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித் உயிரிழந்தான். 5 நாட்கள் போராட்டத்திற்கு மத்தியில் நேற்றிரவு 2.30 மணியளவில் சுஜித் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து குழந்தையின் உடல் மீட்கப்பட்டதுடன் பிரேத பரிசோதனைக்குப் பிறகு இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில் சுஜித்தின் இறப்பு குறித்து பிக் பாஸ் பிரபலங்கள் உருக்கமான பதிவுகளை வெளியிட்டுள்ளனர். இயக்குநர் சேரன் வெளியிட்டுள்ள பதிவில், ‘விழிப்புணர்வின் விதையானாய்..விடைகொடுக்கக்கூட நாங்கள் அருகதையற்றவர்கள்..முடிந்தால் மன்னித்துவிடு இம்மண்ணில் பிறப்பித்த கடவுளை…..’என்று பதிவிட்டுள்ளார்.
விழிப்புணர்வின்
விதையானாய்..
விடைகொடுக்கக்கூட
நாங்கள்
அருகதையற்றவர்கள்
முடிந்தால்
மன்னித்துவிடு
இம்மண்ணில் பிறப்பித்த
கடவுளை….. pic.twitter.com/YcxJk3Js7S— Cheran (@directorcheran) October 29, 2019
அதேபோல் பிக் பாஸ் கவினோ, நியாயம் இல்லாத மரணம் என்றும் நடிகை கஸ்தூரியோ, நாம் மீண்டும் ஒரு சுர்ஜித் வில்சனை இழக்க மாட்டோம். விழிப்புணர்வு தேவை. பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள் கடைப்பிடிக்கப்படவேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார். இதே போல் தர்ஷன், சாண்டி, சாக்ஷி, நடிகை யாஷிகா ஆனந்த் உள்ளிட்ட பலரும் சுஜித் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.