மனைவி மீது கொதித்தெழுந்த விஜயகாந்த்… மாம்பழத்தை கை நீட்டி மடக்கிய பிரேமலதா..!

 

மனைவி மீது கொதித்தெழுந்த விஜயகாந்த்… மாம்பழத்தை கை நீட்டி மடக்கிய பிரேமலதா..!

மக்களவை தேர்தலில் படுதோல்வி அடைந்ததால்  மீம்ஸ் மாம்ஸ்களின் பசிக்கு ஆளாகி இருக்கிறது பா.ம.க, தேமுதிக. ’அதிமாக ஆசைப்பட்ட ஆமபளையும், அளவுக்கு அதிமா கோபப்ப்டுற பொம்பளையும் நல்லா வாழ்ந்ததா சரித்திரமே இல்லை என மீம்ஸ்கள் படபடக்கின்றன.  அதிமுக – பாஜக  கொடுத்த சீட்டுக்களை பிரேமலதா வாங்கிக் கொண்டு ஒதுங்கி இருந்திருக்கலாம். பிரேமலதா

 அந்தத் தொகுதிகளில் வெற்றி பெற்றும் இருக்கலாம்.  இப்போது உள்ளதும் போச்சுடா நொல்லக் கண்ணா’’  என்கிற கதையாக ஒரே நேரத்தில் இரண்டு கட்சிகளிடம் பேரம் பேசியதும் பாஜகவுக்கு கீழ் படிந்து சீட்  ஒதுக்கியதும்தான் அதிமுகவீன் காலை வாரிவிட காரணம்.விஜயகாந்த்

இதனால் விஜயகாந்த் கோபத்தின் உச்சியில் நம்ம கட்சி தோல்விக்கு நீயும், உன் தம்பியும்தான் காரணம். உடம்பு சரியில்லை என  உங்களிடம் பொறுப்பை ஒப்படைத்தால் எல்லாவற்றையும் நாசம் செய்துவிட்டீர்களே’’ எனகொந்தளித்து விட்டதாகக் கூறப்படுகிறது.  விஜயகாந்த்

அவரை சமாதானம் செய்த பிரேமலதா ’’உள்ளாட்சி தேர்தலில் பார்த்துக்  கொள்ளலாம். பாமக நமக்கு கை கொடுக்கவில்லை. கடந்த தேர்தல் போலவே இப்போதும் காலை வாரி விட்டார்கள்’’ என சாக்கு போக்கு சொல்லி அழுது புலம்பி இருக்கிறார். இதனால், பரிதாபப்பட்டு கோபத்தை அடக்கிக் கொண்டு அமைசியாகி உள்ளார் விஜயகாந்த்.