மனைவி கேட்டார் பரோட்டா – கணவன் செய்தார் கலாட்டா -உயிரை விட்டார் விளையாட்டா – கோபத்தால் கயிற்றில் தொங்கினார்

 

மனைவி கேட்டார் பரோட்டா – கணவன் செய்தார் கலாட்டா -உயிரை விட்டார் விளையாட்டா – கோபத்தால் கயிற்றில் தொங்கினார்

நாக்பூரில் திங்கள்கிழமை காலை ஒரு பெண் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது, முந்தைய நாள் தனது கணவர் இரவு உணவிற்கு வெளியே அழைத்துச் செல்ல மறுத்ததால் தற்கொலை செய்து கொண்டார் என  போலீசார் தெரிவித்தனர். இறந்த அந்த பெண் எம்ஐடிசியின் மாடோஷ்ரி நகரில் வசிக்கும் 22 வயதான நிகிதா சுபம் மெஷ்ரம் .

நாக்பூரில் கணவர் இரவு உணவிற்கு வெளியே ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று பரோட்டா வாங்கித்தர மறுத்ததால் ஒரு பெண் தற்கொலை செய்து கொண்டார்

நாக்பூரில் திங்கள்கிழமை காலை ஒரு பெண் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது, முந்தைய நாள் தனது கணவர் இரவு உணவிற்கு வெளியே அழைத்துச் செல்ல மறுத்ததால் தற்கொலை செய்து கொண்டார் என  போலீசார் தெரிவித்தனர். இறந்த அந்த பெண் எம்ஐடிசியின் மாடோஷ்ரி நகரில் வசிக்கும் 22 வயதான நிகிதா சுபம் மெஷ்ரம் .

“பரோட்டா பிரியையான அந்த பெண் இரவு உணவிற்கு வெளியே சென்று ஹோட்டலில் சாப்பிட  விரும்பினார், ஆனால் அந்த பெண்ணின் கணவர் தங்கள் ஒரு வயது குழந்தையின் உடல்நிலை சரியில்லாததை காரணம்  காட்டி கூட்டிப்போக மறுத்துவிட்டார்.அதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த அவர் திங்கள்கிழமை காலை, கணவர்  வேலைக்குச் சென்றபிறகு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்” என்று எம்ஐடிசி காவல் நிலைய ஆய்வாளர் ஹேமந்த்குமார் கராபே கூறினார்.

“தூக்கில் தொங்கிய பெண்ணின் அருகில் அழும்  குழந்தையின் குரலைக் கேட்ட அக்கம்பக்கத்தினர் வேதனையடைந்தனர் . இந்த சம்பவம் குறித்து மேலும் விசாரணை நடந்து வருகிறது,” என்று அவர் மேலும் கூறினார்.