மனைவியை கொன்றுவிட்டு ஜாமீனில் வந்தவர் அடித்து கொலை!

 

மனைவியை கொன்றுவிட்டு ஜாமீனில் வந்தவர் அடித்து கொலை!

இதுகுறித்து தகவலறிந்து வந்த பர்கூர் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத  பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த ஐகொந்தம் வெப்பாலம்பட்டியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மனைவி கஸ்தூரி. கஸ்தூரிக்கு அதே பகுதியை சேர்ந்த  ஒருவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதனால்  கோவிந்தராஜே மனைவி கஸ்தூரி கொலை செய்துள்ளார். இந்த வழக்கில் சிறைக்கு சென்ற அவர் சமீபத்தில் ஜாமீனில் வெளிவந்தார். 

ttn

இந்நிலையில் கோவிந்தராஜ் நேற்று மாலை  வீட்டின் அருகில் உள்ள மாந்தோப்பில் சடலமாக கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்து வந்த பர்கூர் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத  பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

ttn

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  முன்னதாக கோவிந்தராஜ், அவரது மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த நபரையும் அரிவாளால் வெட்டியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவர் தற்போது மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளதால் அவரது உறவினர்கள் பழிவாங்கும் நோக்கில் இவ்வாறு செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.