மனைவியின் கள்ளக்காதல்…ஆத்திரத்தில் கழுத்தறுத்து கொன்ற கணவன்!

 

மனைவியின் கள்ளக்காதல்…ஆத்திரத்தில் கழுத்தறுத்து கொன்ற கணவன்!

தனது மகள்களுக்கு திருமணம் செய்துவிட்ட நிலையில் மகன் மட்டும் ஆந்திராவில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி இருந்துள்ளார். 

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த குருவராஜாகண்டிகை கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். இவருக்கு புஷ்பா என்ற மனைவியும்,   2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். கட்டிட தொழிலாளியான ரமேஷ் தனது மகள்களுக்கு திருமணம் செய்துவிட்ட நிலையில் மகன் மட்டும் ஆந்திராவில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி இருந்துள்ளார். 

tt

புஷ்பாவுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ஒருவருக்கும்  கள்ளக்காதல் இருந்துள்ளது.  இதையறிந்த ரமேஷ் மனைவியை கண்டித்துள்ளார்.  இதனால் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு புஷ்பா கோபித்து கொண்டு பெரியபாளையம் அடுத்த வெங்கல் அருகே உள்ள ஒட்டர்பாளையத்தில் உள்ள தாய் வீட்டுக்கு சென்றுள்ளார்.  இதையடுத்து கடந்த 13-ந்தேதிதான் புஷ்பா மீண்டும் தனது வீட்டுக்கு திரும்பியுள்ளார். 

tt

இந்நிலையில் புஷ்பாவும் அவரது கள்ளக்காதலனும் தனிமையில் இருப்பதை கணவர் ரமேஷ் பார்த்துவிட நேற்றுமுன்தினம் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.  இதை தொடர்ந்து இருவரும் தூங்கா சென்றுவிட நள்ளிரவில் விழித்த ரமேஷ் மனைவியின் கழுத்தை  கத்தியால் அறுத்து கொலை செய்துள்ளார். பின்னர் பைக்கில் கவரைப்பேட்டை போலீஸ் நிலையம் சென்று ரமேஷ் போலீசில் சரண் அடைந்தார்.

இதுகுறித்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற கவரைப்பேட்டை போலீசார், புஷ்பாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.