மனிதனிடம் இருந்து விலங்குக்கு முதன்முறையாக பரவிய கொரோனா தொற்று – ஹாங்காங்கில் செல்லப்பிராணி நாய்க்கு பாதிப்பு

 

மனிதனிடம் இருந்து விலங்குக்கு முதன்முறையாக பரவிய கொரோனா தொற்று – ஹாங்காங்கில் செல்லப்பிராணி நாய்க்கு பாதிப்பு

மனிதனிடம் இருந்து முதன்முறையாக விலங்குக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு உள்ளது.

ஹாங்காங்: மனிதனிடம் இருந்து முதன்முறையாக விலங்குக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு உள்ளது.

ஹாங்காங்கில் ஒரு செல்லப்பிராணி நாய்க்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் மனிதனிடம் இருந்து முதன்முறையாக விலங்குக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு உள்ளது. 60 வயது பெண்மணி ஒருவருக்கு குறைந்த அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது மருத்துவர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரது செல்லப்பிராணியான பொமரேனியன் நாய்க்கும் மருத்துவர்கள் சோதனை நடத்தினர்.

ttn

இதில் அந்த நாய்க்கு கொரோனா பாதிப்பு மிக ஆரம்ப கட்டத்தில் இருப்பது தெரியவந்தது. ஆனால் கொரோனா பாதிப்பிற்கான அறிகுறிகள் அந்த நாயிடம் வெளிப்படையாக தென்படவில்லை. இதைத் தொடர்ந்து அந்த நாய் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது. அதற்கு கொரோனா பாதிப்பு முற்றிலுமாக நீங்கியதும் அதை உரியவரிடம் ஒப்படைக்க மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர்.