மனிதநேயம் தழைக்க, இயேசுபிரான் காட்டிய நல்வழி பாதையில் மக்கள் வாழ வேண்டும் – விஜயகாந்த் ஈஸ்டர் வாழ்த்து
தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் மக்களுக்கு ஈஸ்டர் திருநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை: தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் மக்களுக்கு ஈஸ்டர் திருநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் மக்களுக்கு ஈஸ்டர் திருநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பதிவில், “மனிதர்களின் பாவம் போக்க சிலுவையில் அறையுண்ட இயேசுபிரான், அடுத்த மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்த திருநாளே ஈஸ்டர் பெருவிழாவாக உலகெங்கும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
மனித நேயம் தழைக்கவும், இயேசுபிரான் காட்டிய நல்வழி பாதையில் மக்கள் அனைவரும் தியாக உணர்வோடு வாழ்ந்து , ஈஸ்டர் திருநாளை கொண்டாட எனது ஈஸ்டர் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். (2-2)#EasterSunday pic.twitter.com/5aDa1N0qyb
— Vijayakant (@iVijayakant) April 12, 2020
கொரானா எனும் கொடிய நோயின் பிடியிலிருந்து உலக மக்கள் மீண்டு, உலகில் அமைதி நிலவவும், மனித நேயம் தழைக்கவும், இயேசுபிரான் காட்டிய நல்வழி பாதையில் மக்கள் அனைவரும் தியாக உணர்வோடு வாழ்ந்து , ஈஸ்டர் திருநாளை கொண்டாட எனது ஈஸ்டர் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.