மந்திரம் செய்து தீய சக்திகளை ஏவியதால் பாஜக தலைவர்கள் தொடர்ந்து மரணிக்கின்றனர்: பாஜக பெண் எம்பி சர்ச்சை பேச்சு!

 

மந்திரம் செய்து தீய சக்திகளை ஏவியதால்  பாஜக தலைவர்கள் தொடர்ந்து மரணிக்கின்றனர்: பாஜக பெண் எம்பி சர்ச்சை பேச்சு!

பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்கள் அடுத்தடுத்த இறப்பதற்கு எதிர்க்கட்சிகள் மந்திரம் செய்து தீய சக்திகளை ஏவிவிட்டதே காரணம் என அக்கட்சியின் எம்பி பிரக்யா சிங் தாக்கூர் கூறியுள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. 

போபால்: பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்கள் அடுத்தடுத்த இறப்பதற்கு எதிர்க்கட்சிகள் மந்திரம் செய்து தீய சக்திகளை ஏவிவிட்டதே காரணம் என அக்கட்சியின் எம்பி பிரக்யா சிங் தாக்கூர் கூறியது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. 

கடந்த ஓராண்டில் பாஜகவின் முக்கிய தலைவர்களான முன்னாள் பிரதமர் வாஜ்பாய், அமைச்சர்கள் மனோகர் பாரிக்கர், சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜெட்லி ஆகியோர் மறைந்தனர். 

pragya

இந்நிலையில் பாஜக தலைவர்கள் தொடர் இறப்பிற்கான காரணத்தைக் கூறி அதிர்ச்சியை ஆழ்த்தியுள்ளார் அக்கட்சியின் எம்பி  பிரக்யா சிங் தாக்கூர். இதுகுறித்து பேசிய அவர்,  பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள்   மந்திரம் செய்து தீய சக்திகளை ஏவிவிட்டது. இதனால் பாஜகவின் முக்கிய தலைவர்கள் அடுத்தடுத்து இறக்கின்றனர். இதைச் சாது ஒருவர் என்னிடம் தெரிவித்தார்’ என்றார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த மக்களவைத் தேர்தலின்போது போபால் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பிரக்யா சிங் தாக்கூர்,  இதுபோன்ற பல சர்ச்சையான கருத்துக்களைக் கோரி வருவதை  வழக்கமாகக்  கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.