மத்திய இடைக்கால நிதியமைச்சரானார் பியூஷ்கோயல்

 

மத்திய இடைக்கால நிதியமைச்சரானார் பியூஷ்கோயல்

மத்திய இடைக்கால நிதி அமைச்சராக ரயில்வே அமைச்சர் பியூஷ்கோயல் நியமிக்கப்பட்டுள்ளார்.

புதுதில்லி: மத்திய இடைக்கால நிதி அமைச்சராக ரயில்வே அமைச்சர் பியூஷ்கோயல் நியமிக்கப்பட்டுள்ளார்.

வருகிற பிப்ரவரி 1ந்தேதி மத்திய இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்நிலையில், உடல்நல குறைவு காரணமாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி சிகிச்சை பெறுவதற்காக கடந்த 13ந்தேதி அமெரிக்காவுக்குச் சென்றார்.

arun

இதனையடுத்து தற்போது ரயில்வே அமைச்சராக உள்ள பியூஷ்கோயல் இடைக்கால நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான பரிந்துரையை பிரதமர் மோடி ஜனாதிபதி ராம்நாத்சிங் கோவிந்திற்கு அனுப்பி வைத்தார் . ஜனாதிபதியும் இதற்கான ஒப்புதலை அளித்தார். அருண் ஜெட்லி குணமடைந்து திரும்பும் வரை  இலாகா இல்லாத அமைச்சராக இருப்பார் என்றும் குடியரசுத் தலைவர் மாளிகை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.