மதுவுக்காக எருமை மாட்டை விற்ற கணவர்; தட்டிக்கேட்ட மனைவியை சரமாரியாக வெட்டிய கொடூரம்!

 

மதுவுக்காக எருமை மாட்டை விற்ற கணவர்; தட்டிக்கேட்ட மனைவியை சரமாரியாக வெட்டிய கொடூரம்!

மது அருந்துவதற்காக எருமை மாட்டை விற்ற கணவரை தட்டிக்கேட்ட மனைவியை கோடாரியால் சரமாரியாக வெட்டியா சம்பவம் ஆந்திராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

அமராவதி: மது அருந்துவதற்காக எருமை மாட்டை விற்ற கணவரை தட்டிக்கேட்ட மனைவியை கோடாரியால் சரமாரியாக வெட்டிய சம்பவம் ஆந்திராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள லிங்களபாடு கிராமத்தில் தனது மனைவி ராஜேஸ்வரியுடன் வசித்து வருபவர் பிச்சையா (40). பிச்சையாவுக்கு நீண்டகாலமாக மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. மது போதைக்கு அடிமையான அவர் தனது மனைவியிடம் பணம் கேட்டு அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளார்.

அந்த வகையில் மது அருந்துவதற்காக தாங்கள் வளர்த்து வந்த எருமை மாட்டை சமீபத்தில் விற்றுள்ளார். இதனால், கணவன்  – மனைவி இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி, தனது வீட்டில் இருந்த கோடாரியால் மனைவியின் கால்களை வெட்டியுள்ளார். சம்பவம் நடைபெற்ற போது, தம்பதியின் இரு குழந்தைகளும் வீட்டில்  இருந்துள்ளனர். ரத்த வெள்ளத்தில் சரிந்த தாய் ராஜேஸ்வரியின் அலறல் சத்தத்தை கேட்டு அதிர்சியைடைந்த அவரது மகள் அருகில் இருந்தவர்களை உதவிக்கு அழைத்துள்ளார்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த அக்கம் பக்கத்தினர் ராஜேஸ்வரியை மீட்டு உள்ளூர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். பின்னர், விஜயவாடா அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட ராஜேஸ்வரிக்கு அங்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தற்போது அவர் நலமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் பிச்சையாவை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

எனது அப்பாவும், அம்மாவும் மகிழ்ச்சியாக இல்லை. எனது அம்மாவின் சகோதரர் வீட்டருகே குடியேற அவர் விரும்பினார். ஆனால், அதனை எனது தந்தை ஏற்கவில்லை. சம்பவத்தன்று எருமை மாட்டை விற்ற காரணத்தினால் இருவருக்கும் சண்டை ஏற்பட்டது. திடீரென எனது தாயின் அலறல் சத்தம் கேட்டதால் நான் அங்கு சென்று பார்த்தேன். எனது தந்தை எனது தாயின் கால்களை விட்டிருந்தார் என பாதிக்கப்பட்ட பெண்ணின் மகள் தெரிவித்துள்ளார்.