மதுரை காவல் நிலையத்தில் நிர்வாணமாக ஆட்டம் காட்டிய வழக்கறிஞர்! வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

 

மதுரை காவல் நிலையத்தில் நிர்வாணமாக ஆட்டம் காட்டிய வழக்கறிஞர்! வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

மதுரை காவல் நிலையத்தில் வழக்கறிஞர் ஒருவர் நிர்வாணமாக ஆர்ப்பாட்டம் செய்த வீடியோ சமூகவலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

மதுரை காவல் நிலையத்தில் வழக்கறிஞர் ஒருவர் நிர்வாணமாக ஆர்ப்பாட்டம் செய்த வீடியோ சமூகவலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

lawyer

மதுரையைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் சி.எம். சாமி. இவர் சமீபத்தில் தான் பேசிய வீடியோ காட்சி ஒன்றை சமூகவலைதளங்களில் பரவவிட்டார். அதில் அவர், “வழக்கறிஞர் சி.எம்.சாமி, மதுரை டிஸ்ட்ரிக் கோர்ட்டில் பிராக்டீஸ் பண்றேன். இலங்கையில் நடந்த தீவிரவாத தாக்குதல் நடந்ததற்கு முழு காரணம் ராமநாதபுர மாவட்ட ஆட்சியராக இருந்தவரும் தற்போதைய மதுரை மாவட்ட ஆட்சியராக இருப்பவருமான எஸ்.நடராஜன்  (தற்போது இவர் மாற்றப்பட்டுவிட்டார்.)தான். இதற்கான முழு ஆதாரமும் என்னிடம் இருக்கிறது. எஸ் நடராஜன் ஐ.ஏ.எஸ்., பணம் வாங்கிக்கொண்டு ராமநாதபுரத்தில் இருந்து தீவிரவாதிகளை இலங்iகைக்கு அனுப்பி வைத்தார்” என்று பேசி வீடியோ பதிவு ஒன்றை சமூகவலைதளங்களில் பரப்பினார். 

இந்த நிலையில் மதுரை முன்னாள் மாவட்ட ஆட்சியர் எஸ்.நடராஜன், தரப்பில் காவல்துறையில் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து மதுரை அண்ணா நகர் காவல்நிலைய காவலர்கள், வழக்கறிஞர் சி.எம். சாமியை விசாரித்து, மேல் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து வந்தனர்.

அங்கு வந்த  சி.எம்.சாமி, தனது உடைகள் அனைத்தையும் களைந்து நிர்வாணமாக நின்றார். இதைப் பார்த்து பதறிய காவலர்கள், ஆடையை அணியும்படி சி.எம். சாமியை கேட்டுக்கொண்டனர். ஆனால் இதற்கு மறுத்த சி.எம். சாமி, காவல்துறையை எதிர்த்து முழக்கங்களை எழுப்பினார்.

மேலும் காவல்நிலைய சுவரில் சாய்ந்தபடி ஏதேதோ பேசினார். அப்படி அவர் பேசிய காட்சி  சமூகவலைதளங்களில் பரவி வருகிறது. இது அதிர்சசியை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து மதுரை அண்ணா நகர் காவல் நிலையத்தைத் தொடர்புகொண்டு பேசினோம்.  

“மதுரை மாவட்ட  முன்னாள் ஆட்சியர் எஸ்.நடராஜன் குறித்து சி.எம்.சாமி  அதிர்ச்சிகரமான பேசி வீடியோ ஒன்றை சமூகலைதளங்களில் பரப்பினார் அல்லவா. இது குறித்து எஸ்.நடராஜன் ஐ.ஏ.எஸ். தரப்பில் இருந்து காவல்துறையில் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து சி.எம். சாமியை விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துவந்தோம். இங்கே வந்தவுடன் தானே தனது ஆடைகளை அவிழ்த்து நிர்வாணமாக நின்றார். ஏதேதோ பேசினார். அவர்சற்று மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தோன்றுகிறது” என்றனர்.

இந்த வீடியோ பார்ப்பதற்கு அருவருக்கத்தக்கதாக உள்ள காரணத்தினால் உங்கள் பார்வைக்குக் கொண்டு வரப்படவில்லை.