மதுரையில் துப்பாக்கி சூடு! ரவுடிகளை வளைத்துப் பிடித்த போலீசார்

 

மதுரையில் துப்பாக்கி சூடு! ரவுடிகளை வளைத்துப் பிடித்த போலீசார்

தமிழகம் முழுவதுமாகவே சமீபகாலங்களாக வன்முறைகள் அதிகரித்திருக்கின்றன. இந்நிலையில், மதுரையில், தெப்பகுளம் பகுதியில் நேற்று இரவு காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

madurai

தமிழகம் முழுவதுமாகவே சமீபகாலங்களாக வன்முறைகள் அதிகரித்திருக்கின்றன. இந்நிலையில், மதுரையில், தெப்பகுளம் பகுதியில் நேற்று இரவு காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியே வந்த ஆட்டோவில் இருந்த மணிகண்டன் என்பவர் போலீசாரைக் கண்டதும், திடீரென்று தான் மறைத்து வைத்திருந்த ஆயுதத்தால் போலீசாரைத் தாக்கிவிட்டு, தனது கூட்டாளிகளுடன் தப்பியோட முயற்சித்துள்ளார். 

gunshoot

இதையடுத்து, போலீசார் தற்காப்பிற்காக துப்பாக்கி சூடு நடத்தி, தப்பியோட முயன்ற மணிகண்டன் மற்றும் அவருடைய நண்பர்கள் 5 பேரையும் சுற்றி வளைத்து கைது செய்தனர். மதுரையில் நடந்த இந்த துப்பாக்கி சூடு சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.