மதுரையில் கொதித்தெழுந்த நிர்வாகிகள்… நடுநடுங்கிய அழகிரி..!

 

மதுரையில் கொதித்தெழுந்த நிர்வாகிகள்… நடுநடுங்கிய அழகிரி..!

அழகிரி கலந்து கொண்டார். இந்தக் கூட்டத்தில் கட்சியில் பொறுப்பே இல்லாத, அவரோட ஆதரவாளர்களும் மைக் பிடித்து பேசினார்கள். இதனால், மாவட்ட நிர்வாகிகள் கடுப்பாகி விட்டனர்.

விசுவாசி வாரிசு என வேண்டப்பட்டவர்களுக்கு சீட் கொடுத்தால் உள்ளாட்சி தேர்தலில் நடப்பதே வேறு என காங்கிரஸ் தமிழக தலைவர் கே.எஸ். அழகிரிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்கள் அக்கட்சி நிர்வாகிகள்.கே.எஸ்.அழகிரி

கோஷ்டி மோதல், வாரிசு அரசியல் இல்லாத காங்கிரஸ் கட்சியை எந்தக் கால கட்டத்திலும் பிரித்துப்பார்க்கவே முடியாது. இந்நிலையில், மதுரையில் நடந்த காங்கிரஸ்  தலைவர்கள் ஆலோசனை கூட்டத்தில் ஏற்பட்ட சலசலப்பால் நடுநடுங்கி போயுள்ளார் அழகிரி. கே.எஸ்.அழகிரி

இந்தக் கூட்டத்தில் மாநில தலைவர் என்கிற வகையில் அழகிரி கலந்து கொண்டார். இந்தக் கூட்டத்தில் கட்சியில் பொறுப்பே இல்லாத, அவரோட ஆதரவாளர்களும் மைக் பிடித்து பேசினார்கள். இதனால், மாவட்ட நிர்வாகிகள் கடுப்பாகி விட்டனர். உடனே கொதித்தெழுந்த அவர்கள் நீங்களே ஒரு எடுப்பு… உங்களுகு இவர்கள் துடுப்பா..? சீறி ‘உள்ளாட்சித் தேர்தலில் விசுவாசி, வாரிசு என யாருக்காவது சீட் கொடுக்கக் கூடாது. கட்சிக்காக உழைத்தவர்களுக்கு  தான், சீட் கொடுக்கணும்’ என நிர்வாகிகள் எழுந்து நின்று கூச்சலிட அதை சமாளிக்க, அழகிரி படாதபாடு பட்டுட்டு விட்டார்.