மதுரையில் எய்ம்ஸ் அமையும்: தமிழிசை சவுந்தரராஜன் உறுதி
சென்னை: மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவது உறுதி என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
மதுரை அருகே தோப்பூரில் சுமார் ரூ 1,500 கோடி மதிப்பில் 197 ஏக்கர் பரப்பளவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என கடந்த சில மாதங்களுக்கு முன்பு தெரிவிக்கப்பட்டது. ஆனால் மதுரையை சேர்ந்த மக்கள் விழிப்புணர்வு அறக்கட்டளை அமைப்பை சேர்ந்த ஹக்கிம் என்பவர் எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாக தகவலறியும் உரிமை சட்டத்தில் கேட்ட கேள்விக்கு மதுரையில் எய்ம்ஸ் அமைவதற்கு இதுவரை மத்திய் அமைச்சரவை ஒப்புதல் அளிக்கவில்லை என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டது. இதனால் தமிழக மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
காங்கிரஸ் ஆட்சியில் சுதந்திரம் அடைந்தபின்னர் 60ஆண்டுகளில் வந்தது 9இடங்களில் மட்டுமே.ஆனால் கடந்த 4ஆண்டுகளில் மோடி அவர்களின் அரசு 14 இடங்களில் எய்ம்ஸ் மாடல் மருத்துவமனைகள் புதிதாக அமைய கொள்கை முடிவு எடுத்து செயலாற்றி வருகிறது.நிச்சயம் மதுரையில் விரைவில் எய்ம்ஸ் அமையும் என்பது உறுதி
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiBJP) September 30, 2018
இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் தனது ட்விட்டர் பக்கத்தில் காங்கிரஸ் ஆட்சியில் சுதந்திரம் அடைந்தபின்னர் 60ஆண்டுகளில் வந்தது 9இடங்களில் மட்டுமே.ஆனால் கடந்த 4ஆண்டுகளில் மோடி அவர்களின் அரசு 14 இடங்களில் எய்ம்ஸ் மாடல் மருத்துவமனைகள் புதிதாக அமைய கொள்கை முடிவு எடுத்து செயலாற்றி வருகிறது.நிச்சயம் மதுரையில் விரைவில் எய்ம்ஸ் அமையும் என்பது உறுதி என கூறியுள்ளார்.