மதுரையில் இலவசமாக பிரெட் தரும் பேக்கரி உரிமையாளர் – உணவுக்கு அல்லாடுவோர் மகிழ்ச்சி

 

மதுரையில் இலவசமாக பிரெட் தரும் பேக்கரி உரிமையாளர் – உணவுக்கு அல்லாடுவோர் மகிழ்ச்சி

மதுரையில் ஒரு பேக்கரி உரிமையாளர் ஏழைகள், உணவுக்கு அல்லாடுவோருக்காக இலவசமாக பிரெட் பாக்கெட்டுகளை வழங்கி வருகிறார்.

மதுரை: மதுரையில் ஒரு பேக்கரி உரிமையாளர் ஏழைகள், உணவுக்கு அல்லாடுவோருக்காக இலவசமாக பிரெட் பாக்கெட்டுகளை வழங்கி வருகிறார்.

மதுரையில் ஒரு பேக்கரி உரிமையாளர் ஏழைகள், உணவுக்கு அல்லாடுவோருக்காக இலவசமாக பிரெட் பாக்கெட்டுகளை வழங்கி வருகிறார். மதுரை கூடல்நகர் பகுதியில் ஏ.ஆர்.எம் பேக்கரி உரிமையாளர் ராமசாமி தன்னுடைய பேக்கரி முன்பாக அட்டைப் பெட்டி ஒன்றை வைத்து அதில் ரொட்டி பாக்கெட்டுகளைக் குவித்துள்ளார். பணம் இல்லாதவர்கள், உணவு கிடைக்காதவர்கள் இந்த அட்டைப்பெட்டியில் இருந்து ஆளுக்கு தலா ஒரு ரொட்டி பாக்கெட்டை எடுத்துக் கொள்ளலாம் என அட்டைபெட்டிக்கு அருகிலேயே அட்டை ஒன்றில் எழுதி வைத்துள்ளார். மே 3-வரை இவ்வாறு தொடர்ந்து இலவசமாக ரொட்டிப் பாக்கெட்டுகள் கிடைக்கும் என்றும் அந்த பேக்கரியின் உரிமையாளர் குறிப்பிட்டுள்ளார்.

bakery

பணம் இல்லாதவர்கள், ஏழைகள், உணவு கிடைக்காமல் அல்லாடுபவர்கள் என பலர் அந்த பேக்கரியின் அட்டைப் பெட்டியில் இருந்து ரொட்டி பாக்கெட்டுகளை எடுத்துச் செல்கின்றனர். இவ்வாறு தினமும் தினசரி நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு ரொட்டி பாக்கெட்டுகள் இலவசமாக வழங்கப்படுகின்றன என்று பேக்கரி உரிமையாளர் ராமசாமி கூறுகிறார். மேலும் அந்த பேக்கரியின் வாடிக்கையாளர்கள் சிலரும் தங்களால் இயன்ற உதவியை தங்களின் பேக்கரிக்கு செய்து வருவதாக ராமசாமி குறிப்பிட்டார். பேக்கரியில் காசுக்காக விற்பனை செய்யப்படும் அதே பிரெட் பாக்கெட்டுகளை தான் அட்டைப் பெட்டியில் வைத்து ஏழைகளுக்காக இலவசமாக தருவதாக கூறினார். ஏ.ஆர்.எம் பேக்கரியின் இந்த சேவைக்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பும், பாராட்டும் கிடைத்துள்ளது.