மதுமிதா செய்தது மிகப்பெரிய தவறு : சாக்‌ஷி ஓபன் டாக்!

 

மதுமிதா செய்தது மிகப்பெரிய தவறு : சாக்‌ஷி ஓபன் டாக்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இயக்குநர் சேரன் வென்றால் மகிழ்ச்சி  என நடிகை சாக்‌ஷி அகர்வால் கருத்து தெரிவித்துள்ளார்.

பிக் பாஸ்  3 தமிழ் நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் பரபரப்பாகச் சென்று கொண்டிருக்கிறது. வழக்கத்துக்கு மாறாக ஹவுஸ்மேட்ஸுக்கு  தெரியாமல் வெளியேற்றப்பட்ட சரவணன், போலீஸ் விசாரணை, மதுமிதா தற்கொலை முயற்சி என பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கிறது. அதே போல் இந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய போட்டியாளர்கள் சிலர் நிகழ்ச்சி குறித்து பேட்டி அளித்து அவர்கள் பங்குக்கு டிஆர்பியை உயர்த்தி வருகின்றனர். 

இந்நிலையில்  இயக்குநர்  ரஞ்சித்தின் மனைவி வடிவமைத்த  ஆடை  ஃபேஷன் ஷோ சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் வணிக வளாகத்தில்  நடைபெற்றது. இதில் நடிகைகள் சாக்‌ஷி, மீரா ஆகியோர் கலந்து கொண்டனர். 

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த நடிகை சாக்‌ஷி அகர்வாலிடம் மதுமிதா குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது பேசிய அவர்,  மதுமிதா செய்த செயல் மிகவும் தவறு.பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒப்பந்தத்தில் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தனர். அதாவது வெளியே வந்தாலும் 100 நாட்கள் முடிந்த பிறகு தான் ஊதியம் வழங்கப்படும் என்று குறிப்பிட்டிருந்தனர். என்னைப் பொறுத்தவரையில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது நல்ல அனுபவமாக உள்ளது. இதன் மூலம் எனக்கு அதிகளவு ரசிகர்கள் கிடைத்துள்ளனர். இந்த நிகழ்ச்சியில் சேரன் வெற்றி பெற்றால் தனக்கு மகிழ்ச்சி ‘ என்றார்.