மதுபானம் திருடிய தந்தை ! மகனால் அரைநிர்வாணத்தில் ஓட்டம் !

 

மதுபானம் திருடிய தந்தை ! மகனால் அரைநிர்வாணத்தில் ஓட்டம் !

கேரளாவில் மதுபானத்தை குடித்ததாக கூறி தந்தையை அடித்து துன்புறுத்தி அரைநிர்வாணத்தில் ஓடவிட்ட மகனை போலீசார் தேடிவருகின்றனர்.

கேரளாவில் மதுபானத்தை குடித்ததாக கூறி தந்தையை அடித்து துன்புறுத்தி அரைநிர்வாணத்தில் ஓடவிட்ட மகனை போலீசார் தேடிவருகின்றனர்.

 

வீட்டில் வாங்கி வைத்திருந்த மதுவை எடுத்து குடித்த தந்தையை, தாயின் முன்னிலையில் மகன் அடித்து உதைத்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

sonbeatfather

கேரளா மாநிலம் ஆழப்புழா அடுத்த குரதிக்காடு பகுதியில் வசித்து வருகிறார் ரத்தீஸ். அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நாடு முழுவதும் மதுக்கடைகள் விடுமுறை என்பதால் ஒன்றாம் தேதியே மதுபானம் ஒன்றை வாங்கி வீட்டில் வைத்துள்ளார். பின்னர் வெளியில் சென்றுவிட்டு வீட்டிற்கு வந்து பார்த்தபோது தான் வாங்கி வைத்த மதுபான காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மறுநாள் கடையும் கிடையாது என்ற ஏமாற்றத்தில் மதுபானம் இல்லை என்ற கவலை அவருடைய கைகளுக்கு உதறல் கொடுத்தது. பின்னர் மதுபானத்தை தந்தை குடித்திருக்கலாம் என்று எண்ணியை ரத்தீஸ் அவரை கொடூரமாக தாக்கினார். தான் மதுபானத்தை குடிக்கவில்லை என தந்தை எவ்வளவோ கெஞ்சியும் நம்பாம்ல் அவரை எட்டி உதைத்து சாலையில் அரைநிர்வாணத்தில் ஓடவிட்டார். சாலையில் அரைநிர்வாணத்துடன் ஓடிய முதியவரை காப்பாற்றாத கல்நெஞ்சம் பிடித்த செல்போன் அடிமைகள் அவரை படம் பிடித்துக் கொண்டிருந்தனர். பின்னர் அந்த வீடியோ காட்சிகள் அப்பகுதி முழுவதும் வாட்ஸ்ஆப்பில் பரவியது. இந்த வீடியோவை பார்த்த போலீசார் தந்தையை தாக்கிய ரத்தீஸ் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான அவரை தேடி வருகின்றனர். ஒரு நபர் அரைநிர்வாணமாக ஓடினால் அதை வீடியோ எடுக்கக் கூடாது என்ற அநாகரீகம் கூட தெரியாத அளவுக்கு செல்போன் பலரை அடிமையாக்கி உள்ளது. நம் வீட்டில் ஒருவர் இப்படி ஓடினால் இதுபோல்தான் வீடியோ எடுப்போமா என்பதை சிந்திக்க வேண்டும்.