மதிமுகவுக்கு திமுக ஆதரவளிக்கும்: மு.க.ஸ்டாலின் அதிரடி

 

மதிமுகவுக்கு திமுக ஆதரவளிக்கும்: மு.க.ஸ்டாலின் அதிரடி

மதிமுக நடத்த இருக்கும் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டத்திற்கு திமுக ஆதரவளிக்கும் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சென்னை: மதிமுக நடத்த இருக்கும் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டத்திற்கு திமுக ஆதரவளிக்கும் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

திமுக – மதிமுக கூட்டணியில் சிறிதளவும் கீறல்கள் இல்லை. திமுகவுடனான கூட்டணியில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சமீபத்தில் கூறியிருந்தார். ஆனால் திமுக பொருளாளர் துரைமுருகனோ, மதிமுக , விடுதலை சிறுத்தை கட்சிகள் எங்களுடன் ஒத்த கருத்து கொண்டவர்கள். ஆனால் மதிமுக, விசிக இப்போது வரை எங்களுடன் கூட்டணியில் இல்லை என பேசியிருந்தார். அவரது இந்த பேச்சு மதிமுகவினருக்கும், வைகோவுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது.

இதனையடுத்து புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, திமுகவுடன் நாங்கள் கூட்டணியில் இருக்கிறோமா இல்லையா என்பதை ஸ்டாலின் சொல்லட்டும். துரைமுருகனின் பேச்சு வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது என கூறி தனது அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தார். இதனால் திமுக – மதிமுக உறவு நீடிக்குமா என்ற கேள்வி அனைவரிடத்திலும் எழுந்தது.

இதற்கிடையே,  பேரரிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலையை வலியுறுத்தி மதிமுக சார்பில் வரும் டிசம்பர் 3-ம் தேதி ஆளுநர் மாளிகை போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மதிமுக நடத்த இருக்கும் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டத்திற்கு திமுக ஆதரவு அளிக்கும் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.