மதமாற்ற மூளைச்சலவையில் ஈடுபட்ட நடிகர் விஜய்… விஜய் வீட்டில் ஐடி ரெய்டு நடத்தக் காரணம் இதுதானாம்!?

 

மதமாற்ற மூளைச்சலவையில் ஈடுபட்ட நடிகர் விஜய்… விஜய் வீட்டில் ஐடி ரெய்டு நடத்தக் காரணம் இதுதானாம்!?

ஏ.ஜி.எஸ் குழுமத்துக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்  நடித்து வரும் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு நெய்வேலியில் நடைபெற்று வருகிறது. அங்கு  சென்ற  வருமான வரித்துறை அதிகாரிகள் நடிகர் விஜய்யிடம்  விசாரணை நடத்தினர். இதை தொடர்ந்து அவரை காரில் அழைத்து சென்றும் விசாரித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

ttn

ஏ.ஜி.எஸ் குழுமத்துக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். வரி ஏய்ப்பு புகாரின் பேரில் தியேட்டர், வீடு, அலுவலகம் என 20 இடங்களில் சோதனை செய்யப்பட்டது.

ytn

இதன் எதிரொலியாக தான் விஜய்யிடமும், சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீடு மற்றும்  பனையூர் இல்லத்தில் என விடிய விடிய வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு  வருகின்றனராம். கட்டாயமாக மாஸ்டர் படப்பிடிப்பில் அழைத்து செல்லப்பட்ட விஜய், ஒரு விடுதியில் தங்க வைக்கப்பட்டு அவரிடம் விசாரணை நடத்தியதாகவும், பின்பு இரவு 9 மணியளவில் அங்கிருந்து வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்டதாகவும் தெரிகிறது.

ttn

இந்த ரெய்டு விஜய்யிடம் விசாரணை என பல உண்மைகள் ஒளிந்துள்ளதாக சில செய்திகள் வெளியாகியுள்ளன. அதாவது, கடந்த நவம்பர் மாதம்  ஜேப்பியார் குழுமத்திற்கு உள்பட்ட 32 இங்களில் கடந்த  வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதில் ரூ.1200 கோடி வரை வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.  கணக்கில் காட்டப்படாத ரூ.350 கோடி மதிப்புள்ள சொத்து பத்திரங்கள், ரூ.3 கோடி மதிப்புள்ள தங்க – வைர நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது ஜேப்பியார் கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவ மாணவியர்கள் நன்கொடை என்ற கொடுக்கும் கருப்பு பணங்களாம்.  அதுமட்டுமின்றி என்ஜிஓ  என்ற பெயரில்  வெளிநாட்டிலிருந்து மதம் மாற்றும் கும்பல்கள், கல்விநிறுவனங்கள் என்ற பெயரில் கருப்புப்பணத்தை இங்கு  கொண்டுவந்து குவிக்கின்றன. மதமாற்றக் கும்பல்களுக்குப் பின்புலத்திலிருந்து ஜேப்பியார் குழுமம் இயங்கி வந்துள்ளது. இதில் அரசியல் வாதிகள், சினிமா பிரபலங்கள், பாதிரியார்கள் என பலர் உள்ளனர்.

ttn

சினிமா துறையில் உள்ள நடிகர்கள் விஜய், ஆர்யா, இயக்குநர்கள் அட்லீ, எஸ்.ஏ.சந்திரசேகர், பிரபு சாலமன், இசையமைப்பாளர்கள் ஹாரிஸ் ஜெயராஜ், விஜய் ஆண்டணி  போன்றவர்கள்  இதில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதை கவனித்துக்கொள்ளும் பொறுப்பு, ஜேப்பியார் மகள் ரெஜினாவிடம் இருந்துள்ளது. இதற்காக  சிறப்பு கிறிஸ்தவ ஆராதனை கூட்டம் நடத்தப்படுவதும் அதில் மேற்கூறியவர்கள் கலந்துகொண்டும் உள்ளார்கள். அப்போது பாதிரியார்களை கொண்டு மூளைச்சலவை செய்யப்படுமாம். இப்படி தான் நடிகை ஆர்த்தி கணேஷ், ரமேஷ் கண்ணா உள்ளிட்ட சிலர் மதம் மாறியுள்ளராகளாம்.  இதற்காக ரெஜினா சினிமா பிரபலங்களுக்கு பார்ட்டி கொடுத்து வந்துள்ளார். இதில் நடிகர் விஜய், அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், இயக்குநர் அட்லி, நடிகர் ஆர்யா உள்ளிட்ட பலர் கலந்துகொள்வார்களாம்.

 

ttn

பிகில் படத்துக்கு பைனான்ஸ் செய்ததும் ரெஜினா தான் என்றும் ராயப்பன் கேரக்டர் பஸ்ட்லுக் போஸ்டரில் சிலுவை, ஜெபமாலை  விஜய் அணிந்தபடி படத்தில் நடித்ததும் மூளை சலவைக்கான வேலையே என்று கூறப்படுகிறது. 

ttn

இதையறிந்த வருமானவரித் துறையினர் ரெஜினா பங்களாவில் ஆய்வு செய்ததில் விஜய் மற்றும் இன்னும் சிலர் குறித்த தகவல்கள் கிடைத்ததாகவும், அதனால் தான் அவர் குறிவைக்கப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.  இதை தொடர்ந்து இந்த ரெய்டு விவகாரத்தில் இன்னும் யார் யார் சிக்குவார்கள்  என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.